Top posting users this month
No user |
Similar topics
ஸ்பெஷல் சுழியன்
Page 1 of 1
ஸ்பெஷல் சுழியன்
கடலைப்பருப்பு - ஒரு கப்
சீனி - 1 1/4 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - பொரிப்பதற்கு
மாவிற்கு:
மைதா - முக்கால் கப்
இட்லி மாவு (புளிக்காதது) - ஒரு கப்
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். (தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிவது போல் வடித்தால் அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம். ரசம் நன்றாக இருக்கும்.)
அதே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ மிதமான சூடாக இருக்கும் போதே வடிக்கட்டிய பருப்பை போட்டு கரண்டியால் மசித்து அதனுடன் சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் விதையை பொடி செய்து அதையும் சேர்க்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து மசிய பிரட்டி விடவும். சீனி நன்கு இளகி தளர்வாகும். வாயில் வைத்துப் பார்த்து உப்பு சுவை இன்னும் வேண்டுமெனில் இன்னும் சிறிது சேர்த்து கொண்டால் சீனியின் சுவை எடுத்து காட்டும். அவற்றை அவ்வப்போது கிளறி கொண்டே இருந்தால் நன்கு இறுகி சுருண்டாற்போல் இறுகலாக ஆகும்.
அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மரவையில் கொட்டி ஆறவிடவும். ஆறிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு மைதாவுடன், இட்லி மாவையும் இதர சாமான்களையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கலக்கி வைத்துக் கொள்ளவும். (கட்டி கட்டியாக இருப்பது போல் தோன்றினால் மிக்ஸியில் ஊற்றி ஒரு சுற்று ஓடவிட்டோமேயானால் ஸ்மூத்தான கலவையாகும்.)
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக மாவில் முழுவதும் படும்படி தோய்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
அடி சிவந்தது போன்று ஆனதும் மெதுவாக அவற்றை திருப்பி விடவும். ஒரே நிறமாக சிவந்ததும் எடுத்து டிஷ்யு பேப்பரில் வைக்கவும். சுவையான ஸ்பெஷல் சுழியன் தயார். நன்கு மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
சீனி - 1 1/4 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - பொரிப்பதற்கு
மாவிற்கு:
மைதா - முக்கால் கப்
இட்லி மாவு (புளிக்காதது) - ஒரு கப்
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். (தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிவது போல் வடித்தால் அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம். ரசம் நன்றாக இருக்கும்.)
அதே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ மிதமான சூடாக இருக்கும் போதே வடிக்கட்டிய பருப்பை போட்டு கரண்டியால் மசித்து அதனுடன் சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் விதையை பொடி செய்து அதையும் சேர்க்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து மசிய பிரட்டி விடவும். சீனி நன்கு இளகி தளர்வாகும். வாயில் வைத்துப் பார்த்து உப்பு சுவை இன்னும் வேண்டுமெனில் இன்னும் சிறிது சேர்த்து கொண்டால் சீனியின் சுவை எடுத்து காட்டும். அவற்றை அவ்வப்போது கிளறி கொண்டே இருந்தால் நன்கு இறுகி சுருண்டாற்போல் இறுகலாக ஆகும்.
அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மரவையில் கொட்டி ஆறவிடவும். ஆறிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு மைதாவுடன், இட்லி மாவையும் இதர சாமான்களையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கலக்கி வைத்துக் கொள்ளவும். (கட்டி கட்டியாக இருப்பது போல் தோன்றினால் மிக்ஸியில் ஊற்றி ஒரு சுற்று ஓடவிட்டோமேயானால் ஸ்மூத்தான கலவையாகும்.)
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக மாவில் முழுவதும் படும்படி தோய்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
அடி சிவந்தது போன்று ஆனதும் மெதுவாக அவற்றை திருப்பி விடவும். ஒரே நிறமாக சிவந்ததும் எடுத்து டிஷ்யு பேப்பரில் வைக்கவும். சுவையான ஸ்பெஷல் சுழியன் தயார். நன்கு மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum