Top posting users this month
No user |
சேனைக்கிழங்கு போண்டா
Page 1 of 1
சேனைக்கிழங்கு போண்டா
சேனைக்கிழங்கு - பாதி கிழங்கு
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கடலை மாவு - 4 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்
சேனைக்கிழங்கைத் தோல் சீவிவிட்டு, சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய சேனைக்கிழங்கைத் தண்ணீரில் கழுவி விட்டு, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிவிடவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, சிறிது உப்பு, மிளகாய்த் தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சேனைக்கிழங்கிலுள்ள நீரை வடித்துவிட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்,
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கடலை மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுடச்சுட, சுவையான சேனைக்கிழங்கு போண்டா ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கடலை மாவு - 4 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்
சேனைக்கிழங்கைத் தோல் சீவிவிட்டு, சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய சேனைக்கிழங்கைத் தண்ணீரில் கழுவி விட்டு, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிவிடவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, சிறிது உப்பு, மிளகாய்த் தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சேனைக்கிழங்கிலுள்ள நீரை வடித்துவிட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்,
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கடலை மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுடச்சுட, சுவையான சேனைக்கிழங்கு போண்டா ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum