Top posting users this month
No user |
சுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு
Page 1 of 1
சுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு
சுரைக்காய் - 1 (சிறியது),
தட்டப்பயிறு (காராமணி) - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
கசகசா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 4 பல்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
சுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தட்டப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (முந்தின இரவே கூட ஊற வைக்கலாம்).
ஊற வைத்த தட்டப்பயிறை ஒன்றரை டம்ளர் சேர்த்து, குக்கரில் 6 விசில் விட்டு, பயிர் வெடிக்கும் வரை வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள் சேர்த்து, நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சுரைக்காய், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சுரைக்காய் வதங்கிய பின், அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு,மஞ்சள் தூள் போட்டு, வேக விடவும்.
சுரைக்காய் வெந்தவுடன், கரைத்த புளி, வேக வைத்த பயிறு சேர்த்து, 5 நிமிடம் கொதித்த பின் இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum