Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி, ரணில், மஹிந்த மும்முனைப் போட்டி! ஜெயிக்கப்போவது யாரு!
Page 1 of 1
மைத்திரி, ரணில், மஹிந்த மும்முனைப் போட்டி! ஜெயிக்கப்போவது யாரு!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் மும்முனைப் போட்டிக்கு தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் அதிருப்தி குழுவினருடன் இணைந்து தனியான ஒரு அணியில் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சகலரும் தனது தலைமையின் கீழ் எதிர்வரும் தேர்தலை வெற்றிக்கொள்ள தயாராக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, ஐக்கியத் தேசியக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், யானைச் சி்ன்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பு மனு தெரிவுக்குழுவுக்கு 10,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, தான் கட்டாயமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவே களமிறங்குவதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனியான அணியொன்றில் களமிறங்குவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது. அதனடிப்படையில் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள அபேராம விகாரையில் அடுத்த வாரம் மஹிந்த ராஜபக்சவினுடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த மும்முனைப் போட்டியில் எந்தெந்த அணியில் யார் யார் போட்டியிடவுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் அதிருப்தி குழுவினருடன் இணைந்து தனியான ஒரு அணியில் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சகலரும் தனது தலைமையின் கீழ் எதிர்வரும் தேர்தலை வெற்றிக்கொள்ள தயாராக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, ஐக்கியத் தேசியக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், யானைச் சி்ன்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பு மனு தெரிவுக்குழுவுக்கு 10,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, தான் கட்டாயமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவே களமிறங்குவதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனியான அணியொன்றில் களமிறங்குவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது. அதனடிப்படையில் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள அபேராம விகாரையில் அடுத்த வாரம் மஹிந்த ராஜபக்சவினுடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த மும்முனைப் போட்டியில் எந்தெந்த அணியில் யார் யார் போட்டியிடவுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் மஹிந்த - மைத்திரி கடும் போட்டி
» மஹிந்த - மைத்திரி - ரணில் - பிரபா - சரத் ஆகியோரின் முன்மாதிரி பரிமாணங்களும் அவர்களின் மாற்றங்களும்!
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
» மஹிந்த - மைத்திரி - ரணில் - பிரபா - சரத் ஆகியோரின் முன்மாதிரி பரிமாணங்களும் அவர்களின் மாற்றங்களும்!
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum