Top posting users this month
No user |
Similar topics
பூரி மசால்
Page 1 of 1
பூரி மசால்
உருளைக்கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
கேரட் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி - சிறு துண்டு
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை நீர் விடாமல் அரைத்து, பின்பு நீரில் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், விதைகளை நீக்கி நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவை ஊற்றி, தேவையான அளவு நீர் ஊற்றவும். அடிபிடிக்காத அளவிற்கு கிளறி விட்டு, நன்கு கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். பூரியுடன் சாப்பிட சுவையான பூரி மசால் ரெடி.
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
கேரட் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி - சிறு துண்டு
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை நீர் விடாமல் அரைத்து, பின்பு நீரில் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், விதைகளை நீக்கி நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவை ஊற்றி, தேவையான அளவு நீர் ஊற்றவும். அடிபிடிக்காத அளவிற்கு கிளறி விட்டு, நன்கு கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். பூரியுடன் சாப்பிட சுவையான பூரி மசால் ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum