Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு: கர்நாடக அரசு
Page 1 of 1
ஜெயலலிதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு: கர்நாடக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே 11ம் திகதி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பையடுத்து வெளியான சர்ச்சையை அடுத்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
பின்னர் கடந்த 1ம் திகதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை கர்நாடக அரசு தயாரித்து வருகிறது.
இதற்கான பணிகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்து வருகிறார். ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே 11ம் திகதி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பையடுத்து வெளியான சர்ச்சையை அடுத்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
பின்னர் கடந்த 1ம் திகதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை கர்நாடக அரசு தயாரித்து வருகிறது.
இதற்கான பணிகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்து வருகிறார். ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீபாவளிக்கு பட்டாசுகள் வேண்டாம் : 6 மாத பச்சிளம் குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» மட்டக்களப்பு யுவதிக்கு அடுத்த வாரம் விடுதலை
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
» மட்டக்களப்பு யுவதிக்கு அடுத்த வாரம் விடுதலை
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum