Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில்

Go down

போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில் Empty போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில்

Post by oviya Mon Jun 01, 2015 3:10 pm

போதைப்பொருள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
களனி விகாரைக்கு நேற்று சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரங்கள் அதிகரித்து காணப்படுவதனால் எதிர்கால சந்ததியினரை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பிலே நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தற்போது காணப்படுகின்ற மிகப்பெரிய பிரச்சினையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாங்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். போதைப்பொருள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அது தொடர்பில் உடனடியாக தெரியபடுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம் - ரணில்

போதைப பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழ்வதற்கான காரணங்களில் ஒன்று என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிலை உற்பத்திகள் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடந்த அரசாங்கத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் புகைப் பிடித்தலை தடுக்க சட்டமொன்றை முன்வைத்த போது அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் அவர் அரசாங்கத்தை விட்டு விலகி, பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

இது பாரியளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியது.

கடந்த அரசாங்க ஆட்சியாளர்கள் புகையிலை உற்பத்திகள் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் பின்பற்றிய கொள்கைகள் அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட ஏதுவாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புகைப்பிடித்தலுக்கு எதிரான சர்வதேச தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum