Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!

Go down

அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!     Empty அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!

Post by oviya Fri Dec 26, 2014 2:22 pm

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் 26 டிசம்பர் 2004 ஆம் திகதி மறக்கமுடியாத ஒரு நாள். உலக சமூகத்தை உறையவைத்த நாள். அந்த நாளை பத்து வருடங்கள் கடந்தும் இன்றும் நினைவுகூருகின்றோம்.
இயற்கை அனர்த்தங்கள் பல. அவற்றுள் வெள்ளம் சூறாவளி மண்சரிவு சுனாமி என்பன இலங்கைக்கு பழக்கப்பட்டவை. 1978இல் கிழக்கில் இடம்பெற்ற சூறாவளியும் 2004 இல் கரையோரம் பூராக இடம்பெற்ற சுனாமியும் 2014இல் கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற பாரிய மண்சரிவும் வரலாறாகிவிட்டன.

அந்தளவிற்கு அவை பாரிய அழிவையும் எச்சங்களையும் ஏற்படுத்தியிருந்தன. இவற்றில் 2004 இல் இடம்பெற்ற சுனாமியின் பாதிப்பு என்பது மிகவும் பாரியது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஆம் அது இடம்பெற்று பத்து வருடங்களாகிவிட்டது. அது தொடர்பான பதிவே இங்கு தரப்படுகிறது.

அகவை பத்தில் ஆழிப்பேரலை!

இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றொரு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இன்று உலகம் நினைவுகூருகிறது. ஆம் தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலையே அச்சம்பவமாகும். இந்த துன்பியல் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நித்திரை வராதோர் உள்ளனர். அதனை நேரடியாக சந்தித்தோரில் சிலர் 10வருடங்களாகியும் இன்னும் சுயநினைவுக்கு திரும்பாமலுள்ளனர் அல்லது வழமைக்குத் திரும்பாமலுள்ளனர்.

ஆனாலும் பலர் மறந்தும் மறவாத நிலையிலுள்ளனர். இளம் சந்ததிக்கு வரலாற்றுக்கதை சொல்வது போன்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டமும் உள்ளது. அவர்களுக்கு சுனாமி என்றால் என்ன என்று தெரியாது. சூறாவளி என்றால் இன்று பலருக்குத் தெரியாது. எனவே இவை வரலாறுகள். நிச்சயம் பதியப்படவேண்டியவை.

இந்தோனேசியா சுமாத்ராக் கடற்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரமாகியபோதிலும் இலங்கையில் அனர்த்த பிரிவினர் அதனை துல்லியமாக கூடிய கவனத்தோடு தெரிவிக்காதமை பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்ளக்காரணமாயமைந்ததை இன்றைய தினம் மீண்டும் வேதனையோடு நினைவுகூரவேண்டியுள்ளது.

இன்று நாடெங்கிலும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பத்தாண்டு நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி பலனும் இயற்கை அனர்த்தமா?

திங்களன்று இடம்பெற்ற சனிமாற்றமானது எமது இலங்கையில் அரசியல்ரீதியில் திடீர் திருப்புமுனைகளைக்கொடுக்கும் என்றும் இயற்கை அனர்த்தங்களான காற்று மழை தீ என்பவற்றினால் ஏற்படும் பூமி சம்பந்தமுடைய அனர்த்தங்களும் அமையுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பு

2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் இந்தோனேஷியா இலங்கை இந்தியா தாய்லாந்து மாலைத்தீவு சோமாலியா மியான்மர் மலேஷியா சீசெல்சு மற்றும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.எனினும் இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய பாதிப்பை சந்தித்தன.

உரியவேளையில் தெரிவித்திருந்தால் கடைசி பல்லாயிரக்கணக்கான உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்குமென்பது வெள்ளிடைமலை.

இந்தச் சுனாமியால் உலகில் 2லட்சத்து 50ஆயிரத்து 676 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. குறிப்பாக இந்தோனேசியாவில் 1லட்சத்து 84ஆயிரத்து 135 பேரும் அடுத்ததாக இலங்கையில் 38ஆயிரத்து 195பேரும் இந்தியாவில் 22ஆயிரத்து 709பேரும் தாய்லாந்தில் 5ஆயிரத்து 305பேரும் பலியாகினர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

சுனாமியால் உலகில் இரண்டாவது பாரிய அழிவைச்சந்தித்த இலங்கையை எடுத்துக்கொண்டால் 38ஆயிரத்து 195பேரில் அம்பாறை மாவட்டத்திலேயே 9051பேர் இறந்ததாக சொல்லப்பட்டது.

இரண்டாவது கூடிய இழப்பு அம்பாந்தோட்டையிலாகும். அங்கு 4500 பேர் இறந்தனர். காலியில் 3774பேரும் மட்டக்களப்பில் 2975பேரும் முல்லைத்தீவில் 2902பேரும் என ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின.

பின்பு இத்தொகை சற்று குறைவடைந்து 30ஆயிரத்து 45ஆக மாறியது. அம்பாறை மாவட்டத்தின் இறப்புத் தொகையும் 5ஆயிரத்து890 ஆகியது. மொத்தத்தில் இலங்கையில் அதிகூடிய இறப்பையும் அழிவையும் சந்தித்தது அம்பாறை மாவட்டமே. எனவே அதனை மையப்படுத்தியதாக இக்கட்டுரை அமைகிறது.

பத்து வருடமாகியும் வீடுகிடைக்காத அவலம்!

ஆழிப்பேரலை இடம்பெற்று பத்துவருடங்களாகிவிட்டபோதிலும் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும் சில இடங்களில் இன்னும் வீடுகள் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum