Top posting users this month
No user |
மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வர தேசிய வாதம் தூண்டப்படுகின்றது: அர்ஜுன ரணதுங்க
Page 1 of 1
மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வர தேசிய வாதம் தூண்டப்படுகின்றது: அர்ஜுன ரணதுங்க
ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் நோக்கில் சிலர் தேசிய வாதத்தை தூண்டுவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தில் தேசிய வாதத்தை தூண்ட வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் நோக்கத்தில் தேசிய வாதத்தை தூண்டும் அரசியல் அமைப்புகள், கட்சிகள் மற்றும் தனிநபர்கள் அதனை புறக்கணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களின் கடைகளை தாக்கினார்கள், எனினும் இன்று அவ்வாறான ஒன்றும் இடம் பெறுவதில்லை.
அதேபோன்று, எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமின்றி நாட்டின் அனைத்து கட்சிகளின் ஆதரவுகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார். இது வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்ற ஒரு சம்பவமாகும்.
அதேபோன்று சகல மக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் அற்ற மகத்தான நாடு உருவாகியுள்ளது. எனினும் இன்று சில கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் வெற்றி கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் தேசியவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
முக்கிய சிலர் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தமிழ் சகோதரர்கள், முஸ்லிம் சகோதரர்கள் என்றே கதைத்தார்கள்.
எனினும் இன்று அவர்கள் தமிழ், முஸ்லிம் சகோதரர்களை தவறான முறையில் கதைக்கின்றார்கள்.
மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக தேசியத்தையும் பகிர்ந்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்.
தேசிய வாதத்தை தூண்டுபவர்கள் அவ்வாறு செயற்படுகின்ற நபர்களே.
இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பவர்கள் தேசிய வாதத்தை தூண்டுபவர்கள்.
தேசிய வாதத்தை தூண்டி மஹிந்தவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தில் தேசிய வாதத்தை தூண்ட வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் நோக்கத்தில் தேசிய வாதத்தை தூண்டும் அரசியல் அமைப்புகள், கட்சிகள் மற்றும் தனிநபர்கள் அதனை புறக்கணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களின் கடைகளை தாக்கினார்கள், எனினும் இன்று அவ்வாறான ஒன்றும் இடம் பெறுவதில்லை.
அதேபோன்று, எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமின்றி நாட்டின் அனைத்து கட்சிகளின் ஆதரவுகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார். இது வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்ற ஒரு சம்பவமாகும்.
அதேபோன்று சகல மக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் அற்ற மகத்தான நாடு உருவாகியுள்ளது. எனினும் இன்று சில கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் வெற்றி கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் தேசியவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
முக்கிய சிலர் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தமிழ் சகோதரர்கள், முஸ்லிம் சகோதரர்கள் என்றே கதைத்தார்கள்.
எனினும் இன்று அவர்கள் தமிழ், முஸ்லிம் சகோதரர்களை தவறான முறையில் கதைக்கின்றார்கள்.
மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக தேசியத்தையும் பகிர்ந்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்.
தேசிய வாதத்தை தூண்டுபவர்கள் அவ்வாறு செயற்படுகின்ற நபர்களே.
இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பவர்கள் தேசிய வாதத்தை தூண்டுபவர்கள்.
தேசிய வாதத்தை தூண்டி மஹிந்தவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum