Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க கூடாது: தே.மு.தி.க-வின் நோட்டீஸால் பரபரப்பு

Go down

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க கூடாது: தே.மு.தி.க-வின் நோட்டீஸால் பரபரப்பு Empty ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க கூடாது: தே.மு.தி.க-வின் நோட்டீஸால் பரபரப்பு

Post by oviya Tue May 19, 2015 2:39 pm

ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவியேற்பு செய்து வைக்கக் கூடாது என்று தே.மு.தி.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் அனுப்பிய நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும், அம்மாநிலத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரும் மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே மே 22 திகதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. இதில் ஜெயலலிதா, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து தே.மு.தி.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர், "ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைப்பது சட்டவிரோதமாகும்.

ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum