Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான் உயிருடன் இருப்பதே குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி

Go down

நான் உயிருடன் இருப்பதே குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி Empty நான் உயிருடன் இருப்பதே குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி

Post by oviya Thu May 14, 2015 2:04 pm

செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை நீத்து அகர்வால், தான் குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விடவும் தயார் என்று பேட்டியளித்துள்ளார்.
ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி என்பவரும் அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வாலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை நீத்து அகர்வால் தெலுங்கு தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன்.

மஸ்தான்வலி பிரமா பிரயாணம் என்ற பெயரில் தயாரித்த தெலுங்கு படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன்.

அந்த படப்பிடிப்பின் போது மஸ்தான்வலியும் நானும் நெருங்கி பழகினோம். இந்த காதல் எங்கள் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

மஸ்தான் வலியை என்னால் மறக்க முடியாததால், நானும் மஸ்தான்வலியும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினோம்.

மஸ்தான் வலி பட தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் அதிபர் என்ற முறையில் தான் எனக்கு தெரியும்.

அவருடன் நான் குடும்பம் நடத்திய போது கூட அவர் செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் என்பது எனக்கு தெரியவில்லை.

நான் அவருடைய மனைவி என்ற வகையில் செம்மர கடத்தலில் சிக்கிய அவர் என்னை காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் பொலிசார் என்னை கைது செய்தனர்.

எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இப்போது உயிருடன் இருப்பதே என்னை குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான்.

மஸ்தான்வலி உண்மையை சொன்னால்தான் என்னால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.

மஸ்தான்வலியின் ஆட்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

எனக்கு சாவதை பற்றி பயமில்லை. ஆனால் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

மஸ்தான்வலி சிறையில் இருப்பதால் என்னால் அவரிடம் பேச முடியவில்லை.

மஸ்தான் வலிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆட்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

நீங்கள் மனது வைத்தால் தான் என்னை காப்பாற்ற முடியும். நான் குற்றமற்றவள், நிரபராதி என்பதை நீங்கள் கூறுவதன் மூலம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum