Top posting users this month
No user |
Similar topics
தேங்காய்திட்டில், நாளை யானை–குதிரைகளுடன் ஐய்யப்ப சாமி வீதி உலா
Page 1 of 1
தேங்காய்திட்டில், நாளை யானை–குதிரைகளுடன் ஐய்யப்ப சாமி வீதி உலா
புதுவை தேங்காய் திட்டில் வடபத்ர காளியம்மன் கோவிலில் குடி கொண்டுள்ள ஐய்யப்பசாமி ஒவ்வொரு ஆண்டும் ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 14–வது ஆண்டாக ஐய்யப்பசாமி அன்னதான பிரபுவாக பவனி வரும் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
காலை 7 மணிக்கு வடபத்ர காளியம்மன் கோவிலில் இருந்து அலங்கரித்த யானை மற்றும் குதிரைகள் முன்னே செல்ல மங்கல வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க ஐய்யப்பசாமி வீதி உலா தொடங்குகிறது. தொடர்ந்து மாட வீதிகளான காளிக்கோவில் வீதி, புருஷோத்தம நாயக்கர் வீதி, தெற்கு பள்ளிக்கூட வீதி, மேட்டுத்தெரு, அய்யனார் கோவில் வீதி, புதுநகர் 4 வீதி சந்திப்பு, பிள்ளையார் கோவில் வீதி வழியாக மீண்டும் வடபத்ர காளியம்மன் கோவிலை அடைகிறது.
விழாவையொட்டி புருஷோத்தமன் நாயக்கர் வீதி– காளி கோவில் வீதி சந்திப்பு, பஜனைமடத்து வீதி, பள்ளிக்கூட வீதி, முத்துமாரியம்மன் கோவில், அய்யனார் கோவில் வீதி, புதுநகர் சந்திப்பு, மேட்டுத்தெரு, தண்ணீர் டேங்க், புதுநகர் பொதிகை வீதி, வேம்படி அம்மன் கோவில், அரசு உயர்நிலை பள்ளி, வரசித்தி விநாயகர் கோவில், வடபத்ர காளியம்மன் கோவில் உள்பட 15 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேங்காய்திட்டு அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
காலை 7 மணிக்கு வடபத்ர காளியம்மன் கோவிலில் இருந்து அலங்கரித்த யானை மற்றும் குதிரைகள் முன்னே செல்ல மங்கல வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க ஐய்யப்பசாமி வீதி உலா தொடங்குகிறது. தொடர்ந்து மாட வீதிகளான காளிக்கோவில் வீதி, புருஷோத்தம நாயக்கர் வீதி, தெற்கு பள்ளிக்கூட வீதி, மேட்டுத்தெரு, அய்யனார் கோவில் வீதி, புதுநகர் 4 வீதி சந்திப்பு, பிள்ளையார் கோவில் வீதி வழியாக மீண்டும் வடபத்ர காளியம்மன் கோவிலை அடைகிறது.
விழாவையொட்டி புருஷோத்தமன் நாயக்கர் வீதி– காளி கோவில் வீதி சந்திப்பு, பஜனைமடத்து வீதி, பள்ளிக்கூட வீதி, முத்துமாரியம்மன் கோவில், அய்யனார் கோவில் வீதி, புதுநகர் சந்திப்பு, மேட்டுத்தெரு, தண்ணீர் டேங்க், புதுநகர் பொதிகை வீதி, வேம்படி அம்மன் கோவில், அரசு உயர்நிலை பள்ளி, வரசித்தி விநாயகர் கோவில், வடபத்ர காளியம்மன் கோவில் உள்பட 15 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேங்காய்திட்டு அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேங்காய்திட்டில், நாளை யானை–குதிரைகளுடன் ஐய்யப்ப சாமி வீதி உலா
» பறந்துப் போகுது குட்டி யானை
» நல்ல சேதி சொல்லும் சாமி
» பறந்துப் போகுது குட்டி யானை
» நல்ல சேதி சொல்லும் சாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum