Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் பிரியாணி
Page 1 of 1
சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்
சிக்கன் - 300 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1/4 கட்டு
புதினா - 1/4 கட்டு
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் (அ) டால்டா (அ)
நெய் - 11/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
குங்குமப்பூ கலர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிக்கன் பிரியாணி செய்முறை
பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ப்ரஷர் குக்கரை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி போடவும். தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி தயிரை ஊற்றி நன்கு கலக்கவும். நன்கு கொதித்தவுடன் கோழிக்கறியை போட்டு வதக்கவும். பின் அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துள்ள அரிசியையும் போட்டு வதக்கவும். பின்னர் அரிசி 1 பங்கு என்றால் தண்ணீர் 2 பங்கு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலரையும் போட்டு குக்கரை மூடி 2 விசில் விடவும். நன்கு வெந்த பின் எண்ணெயில் வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சிக்கன் - 300 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1/4 கட்டு
புதினா - 1/4 கட்டு
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் (அ) டால்டா (அ)
நெய் - 11/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
குங்குமப்பூ கலர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிக்கன் பிரியாணி செய்முறை
பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ப்ரஷர் குக்கரை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி போடவும். தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி தயிரை ஊற்றி நன்கு கலக்கவும். நன்கு கொதித்தவுடன் கோழிக்கறியை போட்டு வதக்கவும். பின் அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துள்ள அரிசியையும் போட்டு வதக்கவும். பின்னர் அரிசி 1 பங்கு என்றால் தண்ணீர் 2 பங்கு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலரையும் போட்டு குக்கரை மூடி 2 விசில் விடவும். நன்கு வெந்த பின் எண்ணெயில் வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum