Top posting users this month
No user |
Similar topics
கதம்ப சாதம்
Page 1 of 1
கதம்ப சாதம்
கதம்ப சாதம் தேவையான பொருட்கள்
பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
முருங்கைக் கீரை - 1 கப்
அரைக் கீரை - 1 கப்
முருங்கைக்காய் - 1
அவரைக்காய் - 10
கொத்தவரங்காய் - 10
கத்தரிக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
கதம்ப சாதம் செய்முறை
முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும். கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.
பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
முருங்கைக் கீரை - 1 கப்
அரைக் கீரை - 1 கப்
முருங்கைக்காய் - 1
அவரைக்காய் - 10
கொத்தவரங்காய் - 10
கத்தரிக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
கதம்ப சாதம் செய்முறை
முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும். கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum