Top posting users this month
No user |
Similar topics
திடீரென வீட்டு தரையில் பயங்கர வெப்பம்: அதிர்ச்சியில் உறைந்த நபர்
Page 1 of 1
திடீரென வீட்டு தரையில் பயங்கர வெப்பம்: அதிர்ச்சியில் உறைந்த நபர்
கிருஷ்ணகிரியில் நபர் ஒருவரின் வீட்டின் தரை பகுதி திடீரென வெப்பமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் பகுதி முல்லை நகரில் ராதாகிருஷ்ணன் என்ற நபர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை, அவர் வீட்டின் படிக்கட்டு அருகே அதிக வெப்பமாக இருந்தது.
இதனால் பயந்துபோன ராதாகிருஷ்ணன், உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வெப்பம் வெளியேறிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அந்த இடத்தில் ஒரு தட்டு மற்றும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்த போது தண்ணீர் சூடானதால், இத்தகவலை புவியியல் துறை அலுவலர்களுக்கு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புவியியல்துறை அலுவலர்கள் கூறுகையில், அந்த வீட்டில் தரையின் உள் பகுதியின் மண்ணில் பாஸ்பரஸ், கந்தகம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. மண்ணிலிருந்து அது பிரியும் போது வெப்பம் வெளியேறலாம்.
இதனால் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் தொடர்ந்து இதே நீடித்தால் அந்த பகுதியை தோண்டி, மண்ணை எடுத்து ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என்றும் அப்போது தான் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் பகுதி முல்லை நகரில் ராதாகிருஷ்ணன் என்ற நபர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை, அவர் வீட்டின் படிக்கட்டு அருகே அதிக வெப்பமாக இருந்தது.
இதனால் பயந்துபோன ராதாகிருஷ்ணன், உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வெப்பம் வெளியேறிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அந்த இடத்தில் ஒரு தட்டு மற்றும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்த போது தண்ணீர் சூடானதால், இத்தகவலை புவியியல் துறை அலுவலர்களுக்கு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புவியியல்துறை அலுவலர்கள் கூறுகையில், அந்த வீட்டில் தரையின் உள் பகுதியின் மண்ணில் பாஸ்பரஸ், கந்தகம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. மண்ணிலிருந்து அது பிரியும் போது வெப்பம் வெளியேறலாம்.
இதனால் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் தொடர்ந்து இதே நீடித்தால் அந்த பகுதியை தோண்டி, மண்ணை எடுத்து ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என்றும் அப்போது தான் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குவார்ட்டருடன் இலவசமாக கிடைத்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்
» தரையில் இறங்கும் தேவதைகள்
» தரையில் இறங்கும் விமானங்கள் (நாவல்)
» தரையில் இறங்கும் தேவதைகள்
» தரையில் இறங்கும் விமானங்கள் (நாவல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum