Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காரைக்குடி மீனாட்சிபுரம் மாரியம்மன் கோவில்

Go down

காரைக்குடி மீனாட்சிபுரம் மாரியம்மன் கோவில் Empty காரைக்குடி மீனாட்சிபுரம் மாரியம்மன் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:37 pm

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இக்கோவில் உள்ளது. காரைக்குடி மக்களால் மிகுந்த பக்தியோடு வணங்கப்பட்டு வருகிறது இக்கோவில். வருடத்துக்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் திருவிழா நடை பெறுகிறது. காரைக்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள இடம் மட்டுமல்லாது வெளியூர் மக்கள் கூட்டமும் திருவிழா அல்லாத சாதாரண நாட்களிலும் குவிந்து வருகிறது.

நினைத்த காரியத்தை தடையின்றி நடத்தும் வல்லமை வாய்ந்தது இக்கோவில். வருடத்துக்கு ஒரு முறை வரும் திருவிழாவில் கூடும் கூட்டமே இந்த கோவிலின் புகழை சொல்லும் சாட்சிகள் ஆகும். மற்ற கோவிலில் நடப்பது போல் அம்மனுக்கு உரிய வழக்கமான எழுமிச்சை, மஞ்சள் போன்ற பொருட்களின் முக்கியத்துவம் குறைந்து இக்கோவிலில் தக்காளிப்பழமே அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

கோவிலுக்கு வாங்கி செல்பவர்களும் தக்காளிப்பழத்தையே வாங்கி செல்கிறார்கள். இவ்வளவு புகழ்பெற்று விளங்கும் இக்கோவில் மிகவும் பழமையான கோவிலும் அல்ல ஐம்பது வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட கோவில்தான் இது. இன்றளவும் இக்கோவில் புகழ்பெற்று விளங்க காரணத்திற்கான வரலாறை காணலாம்.

ஸ்தலவரலாறு:

1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள். இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர். அருள்வாக்கு சொல்லிவந்த சிறுமிக்கு திடீரென சின்னம்மை நோய் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை.

திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது. சிறுமி இறக்கும் தருவாயில் கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. சிறுமி இறக்கும் தருவாயில், முன்பு அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார். தனக்கு தீராத நோய் வந்துவிட்டதை சொல்லி அழுதார். அந்த நபரை தேற்றிய சிறுமி, உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது.

அதில் ஒரு தக்காளிபழத்தை எனக்கு கொண்டுவந்து தா என சொன்னாள். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார். நான் சொன்ன இடத்தில் சென்றுபார் இருக்கும் என்றாள். உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது.

அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது. அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம்! பழத்தை எடுத்துகொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார். ஓரிரு நாட்களில் அந்த நபருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது. அருள் வாக்கு சொல்லி வந்த அந்த சிறுமிக்கு பெரியம்மை நோய் முற்றியது. இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள்.

உங்களது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள். அதன் படியே ஊர்மக்களால் இங்கு கோவில் எழுப்பபட்டது. இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக இவள் இருக்கிறாள். வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சியான பொருட்களை வைத்து குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு. சிறுமியாக இருந்து மக்களை காத்து வந்ததால் அம்மனே சிறுமி வடிவம் எடுத்து இங்கு கோவில் கொண்டுவிட்டதாக மக்கள் மனதார நம்புகின்றனர்.

வருடம் ஒரு முறை நடக்கும் திருவிழா மிகச்சிறப்பாக நடந்து திருவிழா முடிந்த பிறகும் சில நாட்களுக்கு காவடிகள் நேர்த்திக்கடன்கள் என தொடர்ந்து நடந்து வருகிறது. தீராத நோய், திருமணம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்பவர்கள் இந்த அம்மனுக்கு தக்காளிப்பழங்களை வாங்கி வந்து படைக்க வேண்டும் என்பது இக்கோவிலின் நியதி.

செல்லும் வழி: சென்னையில் இருந்தோ, மற்ற ஊர்களில் இருந்தோ செல்பவர்கள் காரைக்குடி சென்று அங்கிருந்து நகரின் மையப்பகுதியான மீனாட்சிபுரம் என்ற இடத்திற்கு ஆட்டோக்களில் செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum