Top posting users this month
No user |
Similar topics
குடும்ப வளத்தை பெருக்கும் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
Page 1 of 1
குடும்ப வளத்தை பெருக்கும் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
ஸ்தல வரலாறு:
நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் அமைந்துள்ளது சிந்தாமணிநாதர் கோவில். இங்கு அமைந்துள்ள இறைவன் அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி அளிக்கிறார். சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலின் புறச்சுவர்கள் பார்ப்பதற்கு மிகப்பெரிய கோட்டைச் சுவர்போல் காட்சியளிக்கின்றன.
வலது புறம் அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. பின்புற மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சாஸ்தா கோவில் கொண்டுள்ளார். வடபுறம் மிகப்பெரிய அழகிய திருக்குளத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகம சாஸ்திர முறைப்படி அமைந்த இக்கோவிலின் முன் மண்டபம் கல்யாண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
அழகிய மேடையோடு கூடிய ஊஞ்சல் மண்டபமும், நடராசர் சன்னதியும் அமைந்த இம்மண்டபத்தின் பிரதான வாயிலுக்கு தென்புறம் விநாயகர் சந்நதி உள்ளது. இக்கோவிலின் நெற்களஞ்சியத்தினை பார்த்தால் பண்டைய நாளில், மன்னரும், மக்களும் எந்த அளவு இறைவழிபாட்டிற்கு தான தர்மங்கள் செய்தனர் என்பது விளங்கும்.
இப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும் வடமேற்கு மூலையில் முருகன் சன்னதியும் உள்ளன. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் அர்த்தநாரீஸ்வரர். இத்தலத்து அம்மையாருக்கு இடபாக வல்லி என்று பெயர். மூலஸ்தானத்தின் மேற்கூரை, சந்தன மரக்கட்டைகளால் கட்டப்பட்டுள்ளது.
திருக்கயிலாயத்தில் பார்வதியைப் பலரும் வந்து தரிசித்துப் பார்த்தபோது பிருங்கி ரிஷி மாத்திரம் வண்டு உருவம் எடுத்து அம்மனைப் புறக்கணித்து பரமேஸ்வரனை மாத்திரம் சுற்றி வந்து நமஸ்கரித்துப் போனார். பார்வதி மிகவும் கோபம் கொண்டு இறைவனிடம் இது சரிதானா? என வினவ எல்லோரும் என்னையும் தங்களுடன் சேர்ந்து வணங்கும் போது இம் முனிவர் மட்டும் தனியாகச் சுற்றி வந்தமை எனக்கு அவமானம் என சினம் கொள்ள, ஈஸ்வரன் தேவியிடம் ,தேவி! இன்னும் பலர் நீ வேறு, நான் வேறு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
நீயும் நானும் ஒன்று என்பதை உலகுக்கு காட்டுவோம். இதுவே நல்ல சமயம். ஆகையால் நீ பூலோகத்திற்கு சென்று அகஸ்தியருக்கு கல்யாண திருக்காட்சி காட்டிய பொதிகை மலைச்சாரலின் அருகாமையில் அமைந்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள், பக்தர்கள் வசிக்கும் நந்தவனத்தின் கண் நீ என்னை வேண்டி தவமியற்று.
அது சமயம் நான் வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். பார்வதிதேவியும் இறைவனிடம் இந்திரன் பெயரால் பாண்டிய நாட்டில் ஓர் ஊர் அமைய வேண்டும் என்று கேட்க, இறைவனும் அவ்வாறே வரம் கொடுத்து அமைத்து வாசவனூர் என்ற இத்தலத்திற்கு அனுப்பினார். அங்கு ஒரு புளிய மரத்தின் கீழ் சிவலிங்கம் ஸ்தாபித்து அபிஷேக அர்ச்சனை, ஆராதனை செய்து தவமியற்றினார். சிவபெருமானை புளிய மரத்தடியில் வைத்து பூஜை செய்ததால் சிவபெருமான் இத்தலத்தில் சிந்தாமணி நாதர் என பெயர் பெற்றார்.
அம்மையின் தவ வலிமை கண்ட பரமனார், ‘பார்வதி, நீ வேண்டும் வரம் என்ன? என வினவ அய்யனே, நாம் இருவரும் வேறு வேறாக இருக்காது ஒன்றி ஒரு பாதி பெண்ணாக ஏக உருவாய் அர்த்த நாரீஸ்வர வடிவாய் ஒளி வீசும் அருட்பெருஞ்ஜோதியாய் தோன்ற வேண்டும் என்றார்.அதன்படி அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வரராக விளங்கிய இறைவன் இந்திரனுக்கும் மற்றும் பல மன்னர்களுக்கும் அருள் பல புரிந்த வரலாறுகளும் உள்ளன. நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவும், இக்கோவிலின் திருவிழாவும் ஒரே நாளில் தொடங்கி அங்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் இங்கும் பின்பற்றப்படுகின்றன. தீராத வினைகள், துன்பத்தை நீக்குவதோடு குடும்ப வளத்தை பெருக்குவதாக அர்த்தநாரீஸ்வரரை வழிபடும் பக்தர்கள் கூறுகின்றனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் அமைந்துள்ளது சிந்தாமணிநாதர் கோவில். இங்கு அமைந்துள்ள இறைவன் அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி அளிக்கிறார். சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலின் புறச்சுவர்கள் பார்ப்பதற்கு மிகப்பெரிய கோட்டைச் சுவர்போல் காட்சியளிக்கின்றன.
வலது புறம் அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. பின்புற மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சாஸ்தா கோவில் கொண்டுள்ளார். வடபுறம் மிகப்பெரிய அழகிய திருக்குளத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகம சாஸ்திர முறைப்படி அமைந்த இக்கோவிலின் முன் மண்டபம் கல்யாண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
அழகிய மேடையோடு கூடிய ஊஞ்சல் மண்டபமும், நடராசர் சன்னதியும் அமைந்த இம்மண்டபத்தின் பிரதான வாயிலுக்கு தென்புறம் விநாயகர் சந்நதி உள்ளது. இக்கோவிலின் நெற்களஞ்சியத்தினை பார்த்தால் பண்டைய நாளில், மன்னரும், மக்களும் எந்த அளவு இறைவழிபாட்டிற்கு தான தர்மங்கள் செய்தனர் என்பது விளங்கும்.
இப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும் வடமேற்கு மூலையில் முருகன் சன்னதியும் உள்ளன. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் அர்த்தநாரீஸ்வரர். இத்தலத்து அம்மையாருக்கு இடபாக வல்லி என்று பெயர். மூலஸ்தானத்தின் மேற்கூரை, சந்தன மரக்கட்டைகளால் கட்டப்பட்டுள்ளது.
திருக்கயிலாயத்தில் பார்வதியைப் பலரும் வந்து தரிசித்துப் பார்த்தபோது பிருங்கி ரிஷி மாத்திரம் வண்டு உருவம் எடுத்து அம்மனைப் புறக்கணித்து பரமேஸ்வரனை மாத்திரம் சுற்றி வந்து நமஸ்கரித்துப் போனார். பார்வதி மிகவும் கோபம் கொண்டு இறைவனிடம் இது சரிதானா? என வினவ எல்லோரும் என்னையும் தங்களுடன் சேர்ந்து வணங்கும் போது இம் முனிவர் மட்டும் தனியாகச் சுற்றி வந்தமை எனக்கு அவமானம் என சினம் கொள்ள, ஈஸ்வரன் தேவியிடம் ,தேவி! இன்னும் பலர் நீ வேறு, நான் வேறு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
நீயும் நானும் ஒன்று என்பதை உலகுக்கு காட்டுவோம். இதுவே நல்ல சமயம். ஆகையால் நீ பூலோகத்திற்கு சென்று அகஸ்தியருக்கு கல்யாண திருக்காட்சி காட்டிய பொதிகை மலைச்சாரலின் அருகாமையில் அமைந்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள், பக்தர்கள் வசிக்கும் நந்தவனத்தின் கண் நீ என்னை வேண்டி தவமியற்று.
அது சமயம் நான் வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். பார்வதிதேவியும் இறைவனிடம் இந்திரன் பெயரால் பாண்டிய நாட்டில் ஓர் ஊர் அமைய வேண்டும் என்று கேட்க, இறைவனும் அவ்வாறே வரம் கொடுத்து அமைத்து வாசவனூர் என்ற இத்தலத்திற்கு அனுப்பினார். அங்கு ஒரு புளிய மரத்தின் கீழ் சிவலிங்கம் ஸ்தாபித்து அபிஷேக அர்ச்சனை, ஆராதனை செய்து தவமியற்றினார். சிவபெருமானை புளிய மரத்தடியில் வைத்து பூஜை செய்ததால் சிவபெருமான் இத்தலத்தில் சிந்தாமணி நாதர் என பெயர் பெற்றார்.
அம்மையின் தவ வலிமை கண்ட பரமனார், ‘பார்வதி, நீ வேண்டும் வரம் என்ன? என வினவ அய்யனே, நாம் இருவரும் வேறு வேறாக இருக்காது ஒன்றி ஒரு பாதி பெண்ணாக ஏக உருவாய் அர்த்த நாரீஸ்வர வடிவாய் ஒளி வீசும் அருட்பெருஞ்ஜோதியாய் தோன்ற வேண்டும் என்றார்.அதன்படி அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வரராக விளங்கிய இறைவன் இந்திரனுக்கும் மற்றும் பல மன்னர்களுக்கும் அருள் பல புரிந்த வரலாறுகளும் உள்ளன. நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவும், இக்கோவிலின் திருவிழாவும் ஒரே நாளில் தொடங்கி அங்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் இங்கும் பின்பற்றப்படுகின்றன. தீராத வினைகள், துன்பத்தை நீக்குவதோடு குடும்ப வளத்தை பெருக்குவதாக அர்த்தநாரீஸ்வரரை வழிபடும் பக்தர்கள் கூறுகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum