Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மதுரை பாண்டி கோவில்

Go down

மதுரை பாண்டி கோவில் Empty மதுரை பாண்டி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:27 pm

மதுரை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். அதையும் தாண்டினால் அழகர்கோவில், அதையும் தாண்டி மதுரைக்கு புகழ்சேர்க்கும் கோவில் பாண்டி முனீஸ்வரர் கோவில். எப்பொழுதும் திருவிழாக்கோலமாகவே இக்கோவில் காட்சியளிக்கும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே இங்கு முனீஸ்வரனாக மாறி இக்கோவிலில் இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி உட்பட தென் மாவட்டங்களில் இருந்து கூட்டம் எந்த நேரமும் வந்து கொண்டே இருப்பது இக்கோவிலின் சிறப்பு.

நகரத்தின் மத்தியில் இக்கோவில் இல்லாமல் நெல்லை, விருது நகர், இராமநாதபுரத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் வழியில் பிரதான சாலையில் இக்கோவில் உள்ளது.

ஸ்தலவரலாறு:

கரூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருந்து முத்தரையர் வம்சத்தை சார்ந்த ஒரு வள்ளியம்மை என்ற அம்மையார் மதுரை மானேரியில் குடியேறினார். வள்ளியம்மையின் கனவில் பலமுறை சாமி வந்து தான் மதுரை மேலமடை என்ற இடத்தில் இருப்பதாக கூறியது. ஆனால் வள்ளியம்மை கனவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தொடர்ந்து கனவு வரவும் கிராம மக்கள்கிட்ட இந்த கனவை சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், கருப்பாயூரணி, உத்தங்குடி உட்பட சுற்றுவட்டார மக்கள் அனைவரும் சேர்ந்து சுவாமியை சொன்ன இடத்தில் தேடியபோது உருட்டு விழிகள், முருக்கு மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்மணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது.

அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து வணங்கத்தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். இப்போதும் அந்த வழி வந்த நபர்களே பூசாரியாக தொடர்கிறார்கள்..அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம்.

கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். இன்றும் குலதெய்வம் தெரியாத தென்மாவட்ட மக்கள் இவரையே குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.

எல்லா நாட்களிலும் இங்கு குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், காதணி விழா உட்பட சிறப்பாக நடக்கும். நம்மை மிரட்டி கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் மிரட்டலாக காட்சி கொடுக்கும் முனீஸ்வரர் காப்பாற்றி வருவதாக இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இன்றும் முனீஸ்வரர் வேறு உருவத்தில் நேரில் தோன்றி பல பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருவதாக இப்பகுதியின் பரவலான மக்களால் நம்பப்படுகிறது. முன்பே கூறியபடி பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே இங்கு முனீஸ்வரனாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இவரிடம் சென்று வந்தால் அனைத்து பிரச்சினைகளும் உடைந்து வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பது பக்தர்களின் வாக்கு.

செல்லும் வழி:

சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து விருது நகர், ராஜபாளைய, ராமநாதபுரம், நெல்லை பேருந்துகளில் சென்றால் 3 கிமீ தூரமுள்ள பாண்டி கோவிலில் இறங்கலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களிலும் செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum