Top posting users this month
No user |
சிவகாமசுந்தரி அம்மன் கோவில்
Page 1 of 1
சிவகாமசுந்தரி அம்மன் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரமாகிய வெளிப்பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால், ஞானசக்தியாகிய சிவகாம சுந்தரி அம்பாள் திருக்கோவில் அழகாக அமைந்து அருள் வழங்குகிறது. இங்கு உள் பிரகாரத்தில் சித்ரகுப்தர் சன்னதி உள்ளது.
சித்ரா பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தென்மேற்கு மூலையில் சங்கடஹர விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு தேவிமாகாத்மியம் பழைய சித்திரக்கலை மூலம் எழுதப்பட்டுள்ளது. இக்கோவிலில் கருங்கல் தூண் மரத்தூண் போல் வேலைப்பாடு அமைத்து விளங்குகின்றது. சிற்ப வேலைப்பாடுகளும் மிகுதியாக உள்ளன.
கருங்கல் சங்கிலிகள் தொங்குவதை இங்கு ரசித்துப் பார்க்கலாம். இத்திருக்கோவிலில் அம்பாள் சிவகாமசுந்தரி அருள்பொழியும் திருநயனங்களோடு பேரழகு மிகு திருக்கோலத்தில் கருணையே உருவாக கிழக்கு முகமாக நின்று, பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். வெளிப்பிரகாரத்தில் வடக்கு பக்கத்தில் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.
இது ஆதிசங்கரர் நிறுவி வழிபாடு செய்யப்பட்டாததாக வரலாற்று செய்தி உள்ளது. எதுவும் அபிவிருத்தியடைய இந்த ஸ்ரீ சக்கரத்தின் முன் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும். இந்த அன்னையின் ஆலயம், வண்ணக் கோபுரம், விமானம், பிரகாரம், கொடி மர மண்டபம், முதலியவற்றோடு அமைந்த ஒரு தனிப்பெருங் கோயிலாகத் திகழ்கின்றது.
இக்கோயில் பிரகாரத்தைக் காட்டுவித்தவன், மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தன் என்பவனாவன். இவனே பிரகாரத்துக் திருமாளிகையையும் அமைந்துள்ளான். இப்பிரகாரத்தின் வடமேற்குத் தூண் ஒன்றில் இவனது திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொடி மரம் விளங்கும் மண்டபம் மிகவும் விசாலமானது.
இடைத்தாங்கல் ஏதும் இல்லாத இத்தகைய அகலமுள்ள கருங்கல் மண்டபம் வேறு எங்கும் இன்றில்லை என்றும் கூறலாம். இக்கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் நாட்டியக் கலையின் அபிநயச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 'தந்தைக்குத் தலைப்பிள்ளை', 'தாய்க்கும் கடைப்பிள்ளை' என்று ஒரு முதுமொழி உண்டு.
அதாவது, தந்தைக்கு முதல்பிள்ளை செல்வப் பிள்ளையாகவும் தாய்க்குக் கடைசிப் பிள்ளை செல்லப் பிள்ளையாகவும் விளங்குவர் என்பது இம்முதுமொழியின் பொருள். இதற்கேற்பத் தெற்கு முகமாகத் திருத்தாண்டவம் புரிந்தருளும் நடராசப் பெருமான், மூத்த பிள்ளையாகிய முக்குறுணி விநாயகரைத் தமது வலது பாகத்தில் கிழக்கு முகமாக இருந்திக் கொண்டு விளங்குகிறார்.
அன்னை சிவகாம சுந்தரியோ, தமது செல்லப் பிள்ளையும் இளைய பிள்ளையுமாகிய பாண்டிய நாயகர் என்ற சுப்பிரமணியரைத் தம் இடது புறத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்கின்றாள். இவற்றையெல்லாம் சிதம்பரம் ஆலயத்துக்கு செல்லும் போது நின்று நிதானமாக பார்த்து வழிபட்டு வரவேண்டும்.
சித்ரா பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தென்மேற்கு மூலையில் சங்கடஹர விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு தேவிமாகாத்மியம் பழைய சித்திரக்கலை மூலம் எழுதப்பட்டுள்ளது. இக்கோவிலில் கருங்கல் தூண் மரத்தூண் போல் வேலைப்பாடு அமைத்து விளங்குகின்றது. சிற்ப வேலைப்பாடுகளும் மிகுதியாக உள்ளன.
கருங்கல் சங்கிலிகள் தொங்குவதை இங்கு ரசித்துப் பார்க்கலாம். இத்திருக்கோவிலில் அம்பாள் சிவகாமசுந்தரி அருள்பொழியும் திருநயனங்களோடு பேரழகு மிகு திருக்கோலத்தில் கருணையே உருவாக கிழக்கு முகமாக நின்று, பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். வெளிப்பிரகாரத்தில் வடக்கு பக்கத்தில் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.
இது ஆதிசங்கரர் நிறுவி வழிபாடு செய்யப்பட்டாததாக வரலாற்று செய்தி உள்ளது. எதுவும் அபிவிருத்தியடைய இந்த ஸ்ரீ சக்கரத்தின் முன் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும். இந்த அன்னையின் ஆலயம், வண்ணக் கோபுரம், விமானம், பிரகாரம், கொடி மர மண்டபம், முதலியவற்றோடு அமைந்த ஒரு தனிப்பெருங் கோயிலாகத் திகழ்கின்றது.
இக்கோயில் பிரகாரத்தைக் காட்டுவித்தவன், மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தன் என்பவனாவன். இவனே பிரகாரத்துக் திருமாளிகையையும் அமைந்துள்ளான். இப்பிரகாரத்தின் வடமேற்குத் தூண் ஒன்றில் இவனது திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொடி மரம் விளங்கும் மண்டபம் மிகவும் விசாலமானது.
இடைத்தாங்கல் ஏதும் இல்லாத இத்தகைய அகலமுள்ள கருங்கல் மண்டபம் வேறு எங்கும் இன்றில்லை என்றும் கூறலாம். இக்கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் நாட்டியக் கலையின் அபிநயச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 'தந்தைக்குத் தலைப்பிள்ளை', 'தாய்க்கும் கடைப்பிள்ளை' என்று ஒரு முதுமொழி உண்டு.
அதாவது, தந்தைக்கு முதல்பிள்ளை செல்வப் பிள்ளையாகவும் தாய்க்குக் கடைசிப் பிள்ளை செல்லப் பிள்ளையாகவும் விளங்குவர் என்பது இம்முதுமொழியின் பொருள். இதற்கேற்பத் தெற்கு முகமாகத் திருத்தாண்டவம் புரிந்தருளும் நடராசப் பெருமான், மூத்த பிள்ளையாகிய முக்குறுணி விநாயகரைத் தமது வலது பாகத்தில் கிழக்கு முகமாக இருந்திக் கொண்டு விளங்குகிறார்.
அன்னை சிவகாம சுந்தரியோ, தமது செல்லப் பிள்ளையும் இளைய பிள்ளையுமாகிய பாண்டிய நாயகர் என்ற சுப்பிரமணியரைத் தம் இடது புறத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்கின்றாள். இவற்றையெல்லாம் சிதம்பரம் ஆலயத்துக்கு செல்லும் போது நின்று நிதானமாக பார்த்து வழிபட்டு வரவேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum