Top posting users this month
No user |
காலதேவி நேரக்கோவில்
Page 1 of 1
காலதேவி நேரக்கோவில்
ஸ்தல வரலாறு:
நேரத்திற்காக ஒரு கோவில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா நம்மை இயக்கிக்கொண்டிருப்பது நேரம், நேரம் சரியில்லையென்றால் வாழ்வில் அனைத்திற்கும், குறிப்பாக திருமணம், குழந்தை, வேலையின்மை போன்றவை சரியான நேரங்களில் கிடைக்காமல் பல மக்களும் அவதிப்படுகின்றனர். விஞ்ஞானம் ஆயிரம் தான் வளர்ந்தாலும் நேரம் காலத்தை யாராலும் கணிக்க முடியாது.
ஒருவரின் நேரம் காலத்தை சரிப்படுத்த ஒரு கோவில் இருக்கிறதென்றால் சற்று ஆச்சரியமான விஷயம்தான். மதுரை மாவட்டம் எம். சுப்பலாபுரம் அருகே சிலார்பட்டி என்ற இடத்தில் இக்கோவில் உள்ளது. காலராத்திரி என்று புராணங்களில் வருவதைத்தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.
இவ்வுலகம் முழுவதும் ஈரேழுலோகங்களும் காலதேவியால்தான் இயங்குகிறது பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் கட்டுப்படுவது காலதேவிக்கு மட்டும்தான். காலதேவியால் மட்டுமே கெட்ட நேரம் உள்ள ஒருவரை நல்ல நேரம் உள்ளவராக மாற்றும் சக்தி இந்தக்காலதேவிக்கே உண்டு என்பதுதான் இக்கோவிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்க்கு பிறகே இக்கோவில் நடை திறக்கப்படுகிறது காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்க்கு முன்பே இக்கோவில் மூடப்பட்டு விடும். மீண்டும் மாலை 6 மணிக்கு மேல்தான் திறக்கப்படும். பெளர்ணமி, அமாவாசை தினங்களில் இக்கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. காலதேவிக்கு உகந்த நாளாக இது கருதப்படுகிறது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் முயற்சியில் உருவான கோவில் இது. மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக இந்தக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலை 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் சுற்றிவந்து 11 வினாடிகள் மனமுருக அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்து தரிசித்தால் கெட்ட நேரம் அகன்று நல்ல நேரம் வருவதாக இக்கோவிலின் குருஜி கூறுகிறார்.
செல்லும் வழி: சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டும். பின்னர் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம்.சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்ல முடியும். தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
நேரத்திற்காக ஒரு கோவில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா நம்மை இயக்கிக்கொண்டிருப்பது நேரம், நேரம் சரியில்லையென்றால் வாழ்வில் அனைத்திற்கும், குறிப்பாக திருமணம், குழந்தை, வேலையின்மை போன்றவை சரியான நேரங்களில் கிடைக்காமல் பல மக்களும் அவதிப்படுகின்றனர். விஞ்ஞானம் ஆயிரம் தான் வளர்ந்தாலும் நேரம் காலத்தை யாராலும் கணிக்க முடியாது.
ஒருவரின் நேரம் காலத்தை சரிப்படுத்த ஒரு கோவில் இருக்கிறதென்றால் சற்று ஆச்சரியமான விஷயம்தான். மதுரை மாவட்டம் எம். சுப்பலாபுரம் அருகே சிலார்பட்டி என்ற இடத்தில் இக்கோவில் உள்ளது. காலராத்திரி என்று புராணங்களில் வருவதைத்தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.
இவ்வுலகம் முழுவதும் ஈரேழுலோகங்களும் காலதேவியால்தான் இயங்குகிறது பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் கட்டுப்படுவது காலதேவிக்கு மட்டும்தான். காலதேவியால் மட்டுமே கெட்ட நேரம் உள்ள ஒருவரை நல்ல நேரம் உள்ளவராக மாற்றும் சக்தி இந்தக்காலதேவிக்கே உண்டு என்பதுதான் இக்கோவிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்க்கு பிறகே இக்கோவில் நடை திறக்கப்படுகிறது காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்க்கு முன்பே இக்கோவில் மூடப்பட்டு விடும். மீண்டும் மாலை 6 மணிக்கு மேல்தான் திறக்கப்படும். பெளர்ணமி, அமாவாசை தினங்களில் இக்கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. காலதேவிக்கு உகந்த நாளாக இது கருதப்படுகிறது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் முயற்சியில் உருவான கோவில் இது. மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக இந்தக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலை 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் சுற்றிவந்து 11 வினாடிகள் மனமுருக அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்து தரிசித்தால் கெட்ட நேரம் அகன்று நல்ல நேரம் வருவதாக இக்கோவிலின் குருஜி கூறுகிறார்.
செல்லும் வழி: சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டும். பின்னர் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம்.சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்ல முடியும். தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum