Top posting users this month
No user |
Similar topics
தீயசக்திகளை கட்டுப்படுத்தும் வெட்டுடையார் காளிகோவில் சிவகங்கை
Page 1 of 1
தீயசக்திகளை கட்டுப்படுத்தும் வெட்டுடையார் காளிகோவில் சிவகங்கை
ஸ்தல வரலாறு:
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் உள்ளது இக்கோவில். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை உட்பட வாரத்தின் அனைத்து நாட்களும் கணிசமான அளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். தன்னை யாராவது ஏமாற்றியிருந்தாலோ, துன்பப்படுத்தியிருந்தாலோ இங்குள்ள காளியிடம் வேண்டிக்கொள்கின்றனர், மேலும் அநீதிக்கு எதிரான அனைத்து விஷயங்களில் இருந்தும் மக்களை காக்கிறாள்.
பில்லி, சூனியம் போன்ற கடும் விஷயங்களில் பாதிக்கப்பட்டிருப்போரும் இக்கோவிலுக்கு தவறாமல் வந்து வழிபடுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் இவ்வூரில் வாழ்ந்து வந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக கூறினார். அதன்படி, அந்த பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்.
ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் ஒரு பெரும் ஒளியைக்கண்டார்.
மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அந்த இடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர்.
முத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீகம் கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார்.
இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடைய காளியம்மன்.
ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையா அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையா காளி என்றும் பெயர் வந்தது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் இங்கு திருவிழா நடைபெறுகிறது.
செல்லும் வழி: மாவட்ட தலை நகரமான சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினால் ஊரின் மெயின் சாலையில் இறங்கிகொள்ளலாம். இறங்கியவுடன் ஊருக்குள் 2 கிமீ நடந்து செல்லவேண்டும்.
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் உள்ளது இக்கோவில். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை உட்பட வாரத்தின் அனைத்து நாட்களும் கணிசமான அளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். தன்னை யாராவது ஏமாற்றியிருந்தாலோ, துன்பப்படுத்தியிருந்தாலோ இங்குள்ள காளியிடம் வேண்டிக்கொள்கின்றனர், மேலும் அநீதிக்கு எதிரான அனைத்து விஷயங்களில் இருந்தும் மக்களை காக்கிறாள்.
பில்லி, சூனியம் போன்ற கடும் விஷயங்களில் பாதிக்கப்பட்டிருப்போரும் இக்கோவிலுக்கு தவறாமல் வந்து வழிபடுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் இவ்வூரில் வாழ்ந்து வந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக கூறினார். அதன்படி, அந்த பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்.
ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் ஒரு பெரும் ஒளியைக்கண்டார்.
மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அந்த இடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர்.
முத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீகம் கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார்.
இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடைய காளியம்மன்.
ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையா அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையா காளி என்றும் பெயர் வந்தது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் இங்கு திருவிழா நடைபெறுகிறது.
செல்லும் வழி: மாவட்ட தலை நகரமான சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினால் ஊரின் மெயின் சாலையில் இறங்கிகொள்ளலாம். இறங்கியவுடன் ஊருக்குள் 2 கிமீ நடந்து செல்லவேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum