Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊதியூர் முருகன் கோவில்

Go down

ஊதியூர் முருகன் கோவில் Empty ஊதியூர் முருகன் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:21 pm

ஸ்தல வரலாறு:

500 வருடங்களுக்கு முன் பழமையான இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது. 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணசித்தர் இங்குதான் வசித்து வந்துள்ளார். அனுமன் சஞ்சீவிமலையை தூக்கி வந்தபோது உடைந்த ஒரு பாகம் இங்கும் தவறி விழுந்ததாக வரலாறு.

இந்த மலை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுதசுவாமி என்ற பெயரில் முருகன் கோவில் கொண்டுள்ளார். மலையின் இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. இதனுடைய தொடக்கத்தில் அழகிய மயில்மண்டபம் உள்ளது. அருகே பாத வினாயகர் கோவிலும், இடும்பன் கோவிலும் தென்புறம் அனுமந்தராயன் கோவிலும் உள்ளன.

மேலே நுழைவாயிலோடு கூடிய பெரிய மண்டபம் இருக்கிறது. அதைக்குறட்டு வாசல் என்பர். கொங்கணசித்தர் நீண்ட நாட்கள் வசித்ததால் மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த குகை உள்ளது. சிவபெருமானை இந்த மலையில் கண்டு வணங்கியவர் கொங்கணர்; ஊதியூர் மலையில் தவம் செய்த அவர் ஊதி, பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியதற்க்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால் இது கொங்கணகிரி எனவும் ஊதி பொன் தயாரித்ததால் ஊதியூர் எனவும் அழைக்கப்படுகிறது.

செல்லும் வழி: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் ஊதியூர் அமைந்துள்ளது பெளர்ணமி, பங்குனி உத்திரம், தைப்பூசம், விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த அனைத்து நாட்களும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum