Top posting users this month
No user |
Similar topics
கடன் தொல்லை போக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில்
Page 1 of 1
கடன் தொல்லை போக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது. 5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.
கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார். இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்து பக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள். பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
தினமும் காலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும். லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் அஷ்டம திதிகளிலும் காலை 6 மணிக்கு 7 வகையான திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுவாதிக்கும் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு மகாலட்சுமி பூஜை நடைபெறுகிறது.
ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் காலை 8.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காலை 6 வகையான ஹோமங்கள் நடைபெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.
கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார். இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்து பக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள். பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
தினமும் காலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும். லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் அஷ்டம திதிகளிலும் காலை 6 மணிக்கு 7 வகையான திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுவாதிக்கும் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு மகாலட்சுமி பூஜை நடைபெறுகிறது.
ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் காலை 8.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காலை 6 வகையான ஹோமங்கள் நடைபெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடன் தொல்லைகளை நீக்கும் லட்சுமி நரசிம்மர்
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு
» கடன் தொல்லை போக்கும் இரட்டை பிள்ளையார்
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு
» கடன் தொல்லை போக்கும் இரட்டை பிள்ளையார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum