Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடன் தொல்லைகளை நீக்கும் லட்சுமி நரசிம்மர்

Go down

கடன் தொல்லைகளை நீக்கும் லட்சுமி நரசிம்மர் Empty கடன் தொல்லைகளை நீக்கும் லட்சுமி நரசிம்மர்

Post by oviya Thu Apr 16, 2015 3:31 pm

முற்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் 'திந்திருணி' என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணிவனம் என்பது மருவியே திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர்களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடைபெற அருள்பாலித்தார்.

இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுரகுலத்தில் பிறந்தாலும், நாராயணனின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனுக்கு துன்பம் செய்தான் இரணியன்.

நாராயணனிடம் பக்தி கொண்டதற்காக, பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். நரன் என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத்தினால் உலகம்நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட் சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள்.

நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் நரசிம்ம லட்சுமி கோயில் என்று இதற்கு பெயர் வந்து விட்டது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு. கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum