Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுடன் உறவு கொண்டாடிய ரணில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: லால்காந்த
Page 1 of 1
மஹிந்தவுடன் உறவு கொண்டாடிய ரணில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: லால்காந்த
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது கட்சியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கே உரித்தானது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்த போதும், அனுரகுமார திஸாநாயக்கவே மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசினார். ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவுடன் கோப்பி அருந்திக்கொண்டு அண்ணன், தம்பி போல் இருந்தாரே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. ரணில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பணியை சரியாக நிறைவேற்றவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் நாங்களே மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். ரணில், ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்த வகையிலும் பொருந்தமற்றவர்.
இது தவறான முன்னுதாரணம். சம்பிரதாயபூர்வமாகவே எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுகின்றார். சட்டத்திட்டங்களுக்கு அமைய எதிர்கட்சி தலைவர் நியமிக்கப்படுவதில்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளைச் சட்டங்கள் இல்லை. அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிப்பது தவறானது.
அந்த அடிப்படையில், தினேஷ் குணவர்தனவும் அந்த பதவிக்கு தகுதியற்றவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் நபரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன போன்றவர்களை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளாது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது கட்சியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கே உரித்தானது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்த போதும், அனுரகுமார திஸாநாயக்கவே மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசினார். ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவுடன் கோப்பி அருந்திக்கொண்டு அண்ணன், தம்பி போல் இருந்தாரே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. ரணில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பணியை சரியாக நிறைவேற்றவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் நாங்களே மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். ரணில், ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்த வகையிலும் பொருந்தமற்றவர்.
இது தவறான முன்னுதாரணம். சம்பிரதாயபூர்வமாகவே எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுகின்றார். சட்டத்திட்டங்களுக்கு அமைய எதிர்கட்சி தலைவர் நியமிக்கப்படுவதில்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளைச் சட்டங்கள் இல்லை. அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிப்பது தவறானது.
அந்த அடிப்படையில், தினேஷ் குணவர்தனவும் அந்த பதவிக்கு தகுதியற்றவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் நபரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன போன்றவர்களை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளாது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை: மறுக்கும் மஹிந்த
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum