Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


77 அடி உயர அனுமன்!

Go down

77 அடி உயர அனுமன்!            Empty 77 அடி உயர அனுமன்!

Post by oviya Sat Apr 11, 2015 3:09 pm

சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர் அனுமன். இவர் சஞ்சீவி மலையை தூக்கி "சஞ்சீவையா' என்றும், அஞ்சனையின் புதல்வன் என்பதால் ஆஞ்சநேயன் என்றும், வாயுபுத்திரன் என்பதால் "மாருதி' என்ற பெயரும் பெற்றவர். கன்னட தேசத்தில் இவரை "பிராணதேவர்' எனவும், ஆந்திராவில், "ஆஞ்சநேயலு' எனவும், மகாராஷ்டிராவில் "மாருதி' எனவும் அழைக்கின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் அனுமனுக்கு சிறப்பான உருவங்களை அமைத்து வழிபட்டுள்ளனர்.
சோழர்கள் இவருக்கு செப்புத்திருமேனிகள் (சிலைகள்) உருவாயின. விஜயநகர மன்னர்கள் அனுமன் உருவத்தை நாணயங்களில் அச்சிட்டனர். இதில் விஜயராசர் என்பவர், அனுமனுக்கு இந்தியாவில் 732 இடங்களில் கோயில் எழுப்பியதாக வரலாறு உண்டு.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோயிலில் 77அடி உயர அனுமன் கோயில் கொண்டுள்ளார். இவரை "விஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவரது பீடத்தின் கீழ் கருவறையில், ஸ்ரீ ராம கோடி ஆஞ்சனேயர் எழுந்தருளி உள்ளார். இவர் வணங்கிய கரங்களுடன் எதிரே உள்ள ராமபிரானை வணங்குவது போல காட்சி தருவது சிறப்பாகும். மார்கழி அமாவாசை அன்று இவருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திர தினத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. கருவறை ஆஞ்சநேயருக்கு வியாழன் அல்லது சனிக்கிழமை வடை மாலை, துளசி மாலை அணிவித்து வணங்குவர். இக்கோயிலில், கடந்த 9ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த அனுமனை வணங்கினால் புத்தி, புகழ், பலம், மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை போன்றவைகளை பெறலாம்.""நவ வியாக்ரண வேத்தா'' (இலக்கண வல்லுநர்) என ராமபிரானே, பெருமைபட கூறிய அனுமனை, நாமும் தெய்வச்செயல்புரம் சென்று வணங்கி வரலாம்.
இருப்பிடம்: திருநெல்வேலி- தூத்துக்குடி வழியில் 25 கி.மீ.,
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum