Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்!

Go down

அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்! Empty அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்!

Post by oviya Sat Apr 11, 2015 2:33 pm

* நினைப்பில் உண்மையும், சொல்லில் இனிமையும் மனித வாழ்வுக்கு அவசியமானவை.
* நம்மை வழி நடத்தும் ஆன்மிக ஒளி, நமக்கு எப்போதும் வழிகாட்டி துணை செய்கிறது.
* கடவுள் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், அவன் தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான்.
* சில நேரங்களில் ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
* கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதை விடப் பெருமை மிக்க விஷயம் வேறில்லை.
* நல்ல செயல்களை தள்ளிப் போடுவது கூடாது. செய்ய எண்ணினால் உடனடியாக செயல்படுத்தி விடுங்கள்.
* இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது சரியானது அல்ல. உறக்கத்தைத் தடுப்பதால் உடல்நிலை பலவீனமாகி விடும்.
* அழிவு மனிதனை தாக்கும் போது, மகத்தான சிருஷ்டியும் வரப்போகிறது என எண்ண வேண்டும்.
* பிறருக்காக வாழும் பொதுநலப்பண்புடன் இருப்பதே உயர்ந்த வாழ்வு.
* மனதில் ஆசை, பற்று, அகங்காரம் இவை எதுவுமே இல்லாமல் செயலாற்ற முயலுங்கள்.
* தவறான செயல்களைச் செய்ய நேரும் போது குறைகளை ஒப்புக் கொண்டு அதிலிருந்து விலகுவதே நன்மையளிக்கும்.
* கட்டுப்பாடாக வாழ்வது என்பது, சுதந்திரத்திற்கு முரண்பட்ட விஷயம் அல்ல.
* உண்மையில் பிரச்னை நமக்குள் இருக்கிறது. ஆனால், அது சுற்றுப்புறத்தில் இருந்து வருவதாக தவறாக எண்ணுகிறோம்.
* எந்தச் சூழ்நிலையிலும் மனதிற்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். அப்போது ஆனந்தம் என்னும் தீபம் நம் உள்ளத்தில் தெரியும்.
* கடமையைச் சரிவரச் செய்யுங்கள். ஆனால், பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் விழிப்புணர்வோடு இருங்கள்.
* சிறந்த நண்பன் கடவுள் ஒருவர் மட்டுமே. எதைச் செய்தால் நமக்கு நல்லது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
* நல்ல லட்சியங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பணியில் எப்போது ஈடுபடுங்கள். இதற்காகத்தான், கடவுள் நம்மை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
* மனதைத் தூய்மையாக்கும் பணியை கடவுளிடம் விட்டு விடுங்கள். அதைச் சரிவரச் செய்து நம்மை வழிநடத்துவது அவர் பொறுப்பு.
* நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விட அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான மூல காரணத்தை விலக்குங்கள்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே சிறிதும் கிடையாது. எல்லாம் ஒரு நன்மையைக் கருதித் தான் உலகத்தில் நடக்கிறது.
* ஒழுக்கம் தான் ஆனந்தமாளிகையின் திறவுகோல். பயனற்றதும், பொருளற்றதுமான வறட்டு வேதாந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
* கடவுளின் பார்வையில் பாரபட்சம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் சமநோக்குடனே அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum