Top posting users this month
No user |
Similar topics
அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்!
Page 1 of 1
அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்!
* நினைப்பில் உண்மையும், சொல்லில் இனிமையும் மனித வாழ்வுக்கு அவசியமானவை.
* நம்மை வழி நடத்தும் ஆன்மிக ஒளி, நமக்கு எப்போதும் வழிகாட்டி துணை செய்கிறது.
* கடவுள் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், அவன் தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான்.
* சில நேரங்களில் ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
* கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதை விடப் பெருமை மிக்க விஷயம் வேறில்லை.
* நல்ல செயல்களை தள்ளிப் போடுவது கூடாது. செய்ய எண்ணினால் உடனடியாக செயல்படுத்தி விடுங்கள்.
* இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது சரியானது அல்ல. உறக்கத்தைத் தடுப்பதால் உடல்நிலை பலவீனமாகி விடும்.
* அழிவு மனிதனை தாக்கும் போது, மகத்தான சிருஷ்டியும் வரப்போகிறது என எண்ண வேண்டும்.
* பிறருக்காக வாழும் பொதுநலப்பண்புடன் இருப்பதே உயர்ந்த வாழ்வு.
* மனதில் ஆசை, பற்று, அகங்காரம் இவை எதுவுமே இல்லாமல் செயலாற்ற முயலுங்கள்.
* தவறான செயல்களைச் செய்ய நேரும் போது குறைகளை ஒப்புக் கொண்டு அதிலிருந்து விலகுவதே நன்மையளிக்கும்.
* கட்டுப்பாடாக வாழ்வது என்பது, சுதந்திரத்திற்கு முரண்பட்ட விஷயம் அல்ல.
* உண்மையில் பிரச்னை நமக்குள் இருக்கிறது. ஆனால், அது சுற்றுப்புறத்தில் இருந்து வருவதாக தவறாக எண்ணுகிறோம்.
* எந்தச் சூழ்நிலையிலும் மனதிற்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். அப்போது ஆனந்தம் என்னும் தீபம் நம் உள்ளத்தில் தெரியும்.
* கடமையைச் சரிவரச் செய்யுங்கள். ஆனால், பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் விழிப்புணர்வோடு இருங்கள்.
* சிறந்த நண்பன் கடவுள் ஒருவர் மட்டுமே. எதைச் செய்தால் நமக்கு நல்லது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
* நல்ல லட்சியங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பணியில் எப்போது ஈடுபடுங்கள். இதற்காகத்தான், கடவுள் நம்மை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
* மனதைத் தூய்மையாக்கும் பணியை கடவுளிடம் விட்டு விடுங்கள். அதைச் சரிவரச் செய்து நம்மை வழிநடத்துவது அவர் பொறுப்பு.
* நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விட அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான மூல காரணத்தை விலக்குங்கள்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே சிறிதும் கிடையாது. எல்லாம் ஒரு நன்மையைக் கருதித் தான் உலகத்தில் நடக்கிறது.
* ஒழுக்கம் தான் ஆனந்தமாளிகையின் திறவுகோல். பயனற்றதும், பொருளற்றதுமான வறட்டு வேதாந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
* கடவுளின் பார்வையில் பாரபட்சம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் சமநோக்குடனே அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
* நம்மை வழி நடத்தும் ஆன்மிக ஒளி, நமக்கு எப்போதும் வழிகாட்டி துணை செய்கிறது.
* கடவுள் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், அவன் தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான்.
* சில நேரங்களில் ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
* கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதை விடப் பெருமை மிக்க விஷயம் வேறில்லை.
* நல்ல செயல்களை தள்ளிப் போடுவது கூடாது. செய்ய எண்ணினால் உடனடியாக செயல்படுத்தி விடுங்கள்.
* இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது சரியானது அல்ல. உறக்கத்தைத் தடுப்பதால் உடல்நிலை பலவீனமாகி விடும்.
* அழிவு மனிதனை தாக்கும் போது, மகத்தான சிருஷ்டியும் வரப்போகிறது என எண்ண வேண்டும்.
* பிறருக்காக வாழும் பொதுநலப்பண்புடன் இருப்பதே உயர்ந்த வாழ்வு.
* மனதில் ஆசை, பற்று, அகங்காரம் இவை எதுவுமே இல்லாமல் செயலாற்ற முயலுங்கள்.
* தவறான செயல்களைச் செய்ய நேரும் போது குறைகளை ஒப்புக் கொண்டு அதிலிருந்து விலகுவதே நன்மையளிக்கும்.
* கட்டுப்பாடாக வாழ்வது என்பது, சுதந்திரத்திற்கு முரண்பட்ட விஷயம் அல்ல.
* உண்மையில் பிரச்னை நமக்குள் இருக்கிறது. ஆனால், அது சுற்றுப்புறத்தில் இருந்து வருவதாக தவறாக எண்ணுகிறோம்.
* எந்தச் சூழ்நிலையிலும் மனதிற்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். அப்போது ஆனந்தம் என்னும் தீபம் நம் உள்ளத்தில் தெரியும்.
* கடமையைச் சரிவரச் செய்யுங்கள். ஆனால், பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் விழிப்புணர்வோடு இருங்கள்.
* சிறந்த நண்பன் கடவுள் ஒருவர் மட்டுமே. எதைச் செய்தால் நமக்கு நல்லது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
* நல்ல லட்சியங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பணியில் எப்போது ஈடுபடுங்கள். இதற்காகத்தான், கடவுள் நம்மை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
* மனதைத் தூய்மையாக்கும் பணியை கடவுளிடம் விட்டு விடுங்கள். அதைச் சரிவரச் செய்து நம்மை வழிநடத்துவது அவர் பொறுப்பு.
* நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விட அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான மூல காரணத்தை விலக்குங்கள்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே சிறிதும் கிடையாது. எல்லாம் ஒரு நன்மையைக் கருதித் தான் உலகத்தில் நடக்கிறது.
* ஒழுக்கம் தான் ஆனந்தமாளிகையின் திறவுகோல். பயனற்றதும், பொருளற்றதுமான வறட்டு வேதாந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
* கடவுளின் பார்வையில் பாரபட்சம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் சமநோக்குடனே அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum