Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இதோ! உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது!

Go down

இதோ! உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது!            Empty இதோ! உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது!

Post by oviya Sat Apr 11, 2015 2:31 pm

* இன்று உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. பலவித கலாசார, நம்பிக்கைகள் கொண்ட மக்களின் சங்கமமாக விளங்குகிறது. பணியின் காரணமாக மனிதன் உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது. அதற்கேற்ற பரந்த மனப்பான்மை மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
* ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்களே இன்றைய பெற்றோராக இருக்கின்றனர். அதனால், குழந்தைகளின் மனநிலையும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால், அன்பும், கண்டிப்பும் கலந்த நிலையில் அவர்களை நெறிப்படுத்துவதே சரியான வழிமுறை.
* மனிதன் எல்லோருடனும் சகஜமாக நட்பு பாராட்டி பழக வேண்டும். பலரும் கூடி ஒன்றாக வாழும் சமுதாயத்தில் நட்புணர்வு இல்லாவிட்டால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது.
* கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பயத்தைக் கைவிடுங்கள். சுதந்திரமனப்பான்மையுடன் நிகழ்காலத்தை அணுகுங்கள். விசாலமான கண்ணோட்டத்துடன் மனதில் தன்னம்பிக்கையை மலரச் செய்யுங்கள்.
* நம் பழமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயலுங்கள். அதே சமயம் நவீன உலகத்திலுள்ள புதுமையையும் வரவேற்று மகிழுங்கள். நற்பண்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வாருங்கள்.
* வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். இதன் மூலம் செயலாற்றுவதற்கான துணிவும், வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கான நம்பிக்கையும் மனதில் நிலைக்கும்.
* பெரிய பிரமுகரின் மெய்க்காப்பாளன் எப்போதும் விழிப்புடன் இருப்பது போல, உலக வாழ்வில் விழிப்புடன் செயல்படுங்கள்.
* குதிரை மேல் சவாரி செய்பவன் போல, அதன் போக்கில் சென்று லகானை இழுத்துப் பிடிப்பது போல, பெற்றோர் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுப்பதுடன் கண்டிக்கவும் வேண்டும்.
* உலகிலுள்ள விஷயங்களில் எல்லாம் உன்னதமானது அன்பு ஒன்றே. அன்பில்லாத உலகம் அர்த்தமற்றதாகி விடும்.
* வாழ்க்கையே உங்களுக்கு கடவுளால் அளிக்கப்பட்டுள்ள பரிசுப்பொருள். பெரும்பாலானவர்கள் அதை திறந்து பார்க்காமல் காலம் கடத்துகிறார்கள். உள்ளத்தைத் திறந்து பாருங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பது புரியத் தொடங்கும்.
* மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உபசார வார்த்தைகளை மனமாறச் சொல்லுங்கள். புதிய சக்தியும், நல்ல அதிர்வுகளும் வெளிப்படும் விதத்தில் உங்களின் பேச்சு அமையட்டும்.
* நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆழ்மனதிற்குச் சென்று சுயபரீட்சை செய்து பாருங்கள். தவறுகள் நீங்குவதோடு மன அழுத்தம் காணாமல் போகும். அப்போது சுதந்திரக் காற்று வீசத் தொடங்கும்.
* "உலகிலுள்ள அனைவரும் என்னைச் சேர்ந்தவரே' என்னும் உணர்வை மனதில் நிலைநிறுத்துங்கள். அதுவே உங்களைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலையை உருவாக்கும்.
* தினமும் சிறிது நேரம் இசை, விளையாட்டு, தியானம் என்று பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுங்கள். இதனால், இறுக்கம் நீங்கி மனம் ஆசுவாசப்படத் தொடங்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum