Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நல்லற சிந்தனைகள்

Go down

நல்லற சிந்தனைகள்                Empty நல்லற சிந்தனைகள்

Post by oviya Sat Apr 11, 2015 2:17 pm

விதியின் போக்கை மாற்றி, நற்பலன் அளிக்கும் கோடீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்கோடிக்காவலில் அருளுகிறார். சனிப்பெயர்ச்சி ஆகியுள்ள இந்த நேரத்தில், குழந்தை மனமும், இளமையான தோற்றமும் கொண்ட சனீஸ்வரரை தரிசிக்க இந்தக் கோயிலுக்கு சென்று வரலாம்.
தல வரலாறு: மந்திரங்கள் தவறான செய்கைக்கு பயன்படுத்தப்பட்டதால், அவற்றின் மீது கோபப்பட்ட துர்வாசர் அவற்றிற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்தன. சிவனின் முன்னிலையில் சரியாக உச்சரிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபாடு செய்தனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் "கோடீஸ்வரர்' என்றும், ஊர் "திருக்கோடிக்காவல்' என்றும் அழைக்கப்பட்டது.
தல சிறப்பு : சனிபகவானும் எமனும் எதிரெதிரேயும், சித்திரகுப்தரும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சந்நிதியிலும் உள்ளனர். இந்தக் கோயிலில் செய்யும் தியானம், ஹோமம், ஜபத்திற்கு, தானத்திற்கு மும்மடங்கு சக்தி உண்டு.
பாலசனி: இங்குள்ள சனிபகவான் "பாலசனி' எனப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, மரணச் சனி என மூன்று ஏழரைச்சனி காலத்தில் உள்ளவர்களும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். ஊரை ஒட்டி காவிரி நதி, உத்தரவாஹினியாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.
குறையும் விதிப்பயன்: விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். "எல்லாம் என் விதி' என்ற நிலையில் கஷ்டப்படுபவர்கள், விதிப்பயனைக் குறைக்க இத்தலம் வந்து கோடீஸ்வரரையும், திரிபுரசுந்தரி அம்மனையும் தரிசிக்க வேண்டும். பின் எமதர்மர், சித்ரகுப்தர், பாலசனீஸ்வரரைத் தரிசித்து நம் குறையைச் சொன்னால் அதன் பாதிப்பு குறையும்.
சக்தி மிக்க மந்திரம்:
""த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய
த்ரிகோடி பரிஸேவித:
த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:
த்ரிகோடி பரிவேஷ்டித: என்று ஆரம்பமாகும்
சகஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு, அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டது இது. திருக்கோடிக்காவலில் உள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில், ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், நீராடும்போது, மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து, திரிபுரசுந்தரியான அம்பாள், முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாள். இந்த மந்திரத்தை தினமும் பக்தியுடன் வாசிப்பவர்களுக்கு விதி எப்படியிருந்தாலும் அது நல்ல விதமாக மாறும்.
சிறப்பம்சம்: கோடீஸ்வரர் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்தோடு உள்ளார். கரையேற்று விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால், இப்பிறப்பிலும், மறு பிறப்பிலும் துன்பம் களைவார். தன் கணவனைக் கொன்ற "லோககாந்தா' என்ற பெண், தன்னுடைய இறுதி காலத்தில் இந்த தலத்திற்கு வந்தாள். அவள் மரணமடைந்ததும் எம தூதர்கள் அந்தப் பெண்ணை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். எமன் சிவபெருமானிடம் காரணம் கேட்டான். அதற்கு சிவன், ""திருக்கோடிக்காவலுக்கு வந்து என்னை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கமே,'' என்றார். அதற்காக, இங்கு வருவோரெல்லாம் தவறு செய்து விட்டு போகலாம் என்று அர்த்தமில்லை. ஒரு தலத்தின் பெருமையை உயர்த்திச் சொல்ல இவ்வாறு புராணங்கள் எடுத்துச் சொல்லும். இங்கே சென்று, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, திருந்தி வாழ்ந்தால் தான் இது சாத்தியம்.
ஆழ்வார்களுக்கு தரிசனம்: ஒரு முறை ஆழ்வார்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க திருப்பதி சென்றனர். பெருமாள் ஆழ்வார்களுக்கு காட்சி கொடுக்காமல், ""திருக்கோடிக்காவில் எனது தங்கை திரிபுரசுந்தரி ஆவன செய்வாள்,'' என்று அருளினார். இதையடுத்து ஆழ்வார்கள் திருக்கோடிக்காவல் வந்தனர். அப்போது, ஆழ்வார்களுக்கு திரிபுரசுந்தரி அம்பாள், திருப்பதி வெங்கடாஜலபதியின் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினாள்.
இருப்பிடம்:கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ.,
திறக்கும் நேரம் : காலை 6.00-12.00, மாலை 5.00-9.00.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum