Top posting users this month
No user |
Similar topics
கருணை உள்ளமே கடவுள் இல்லமே!
Page 1 of 1
கருணை உள்ளமே கடவுள் இல்லமே!
* உலகம் முழுவதையும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகில் யாரும் உங்களுக்கு அந்நியமானவர் அல்ல.
* நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் இருப்பதற்குச் சமம் தான்.
* யாராவது ஒருவருக்கு மனமகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
* கடவுளை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடவுளை நேசிப்பவன் எவனோ அவனே புண்ணியவான்.
* சோம்பலால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டு விடுகிறது. சோம்பலைப் புறக்கணித்து விட்டு ஆற்று வெள்ளம் எப்போதும்
ஓடிக் கொண்டிருப்பது போல சுறுசுறுப்புடன் இயங்குங்கள்.
* கருணை என்பதே இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியாது. இரக்கமிக்க கருணை உள்ளத்திலேயே கடவுள் குடியிருப்பார்.
* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை. நடந்ததையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால் துன்பம் தான் உண்டாகும்.
* செல்வந்தன் பணத்தின் மூலமும், ஏழை இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.
* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி எந்த நன்மையும் உண்டாகாது.
* துன்பம் வந்த காலத்தில் மட்டும் கடவுளை மக்கள் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயே கடவுளைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
* மனதில் ஆசைகள் குறையும் அளவிற்கு ஒருவனுக்கு அமைதியும், நிம்மதியும் உண்டாகும்.
* கடவுளைக் காண்பதும், எப்போதும் அவன் நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே நம் வாழ்வின் லட்சியமாகும்.
* நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். அதனால், அற்பமானது என்று எதையும் இழிவாக நினைக்காதீர்கள்.
* கடவுளிடம் கண்ணீர் விட்டு அழுது விடுங்கள். இதனால், மன அழுக்கும், துன்பமும் குறைந்து விடும்.
* சந்தனத்தைத் தொட்ட கை மணப்பது போல, கடவுளைத் தியானித்தால் மனமும் கடவுள் மயமாகி, எங்கும் நறுமணம் பரவும்.
* சுடும் வார்த்தைகளைப் பேசுவதால், ஒருவரது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. அநாவசியமாகவோ, பிறர் விரும்பாதவற்றையோ பேசுதல் கூடாது.
* மனிதன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஆனால், மகானோ சிரிக்கிறான். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.
* துன்பத்தைக் கண்டு துவளாதீர்கள். அவை நீடித்திருப்பதில்லை. பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல, அவை ஓடி மறைந்து விடும்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் காய்கறி அல்ல. நேர்மை, சத்தியம், அன்பு இவையே கடவுளுக்கு பிடித்தமானவை. கடவுளை சரண் அடைந்தால், அளவற்ற கருணையை நம் மீது பொழிவார்.
* மன அமைதியை விரும்பினால், பிறர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். மாறாக எப்போதும் உங்கள் குறைகளை எண்ணிப் பாருங்கள்.
* நற்செயல்களைச் செய்ய, காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க கூடாது. வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் நற்செயல்களில் ஈடுபடுங்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum