Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உழைப்பால் உயர்ந்தவனை உலகமே போற்றி வணங்கும்!

Go down

உழைப்பால் உயர்ந்தவனை உலகமே போற்றி வணங்கும்!        Empty உழைப்பால் உயர்ந்தவனை உலகமே போற்றி வணங்கும்!

Post by oviya Sat Apr 11, 2015 1:16 pm

ராமபிரானுக்கு, அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரைகள் "ராமகீதை' என்ற நூலாகக் தொகுக்கப்பட்டது.
அதிலிருந்து சில வரிகள்...!

* பெரிய மலை கூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம். ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
* செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்தூய்மை குறையத் தொடங்குகிறது.
* எங்கும் பரவியிருக்கும் காற்றைக் கூடக் கட்டி விடலாம். ஆனால், மனதை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல.
* கோபத்தால் மனிதன் பிறருக்கு செய்யும் தீமையை விட, தனக்கே அதிக தீங்கு செய்து கொள்கிறான்.
* இளமையில் உழைத்தவன், முதுமையில் வளமோடு வாழ்வான். உழைப்பால் உயர்ந்தவனை உலகமே வணங்கிப் போற்றும்.
* பிறருக்கு தீங்கு செய்யாதவர்கள், மீண்டும் மண்ணில் பிறப்பெடுத்து துன்பப்படத் தேவையிருக்காது.
* அநேகர் மனதில் ஆணவம் சிங்கம் போல அலைந்து திரிகிறது. இதை விட்டுவிட்டால் அமைதி குடி புகுந்து விடும்.
* இளமையிலேயே நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், முதுமையில் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.
* வீண் பேச்சில் ஈடுபடுபவன், தனக்குத் தானே பள்ளம் தோண்டிக் கொள்கிறான். தேவையற்ற நேரத்தில், மவுனமாக இருப்பது நல்லது.
* இன்ப, துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இதில் ஒன்றை மட்டும் அடைய நினைப்பது அறியாமை.
* ஏழ்மையில் தவித்தாலும், நேர்மையுடன் வாழ்வதே பெருந்தன்மை. சுயமுயற்சியால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சி காண்பதே சிறந்தது.
* பிறர் செய்யும் தீமையைக் கண்டு கொள்ளாமல் இருப்பவன், சமுதாயத்திற்கே தீங்கு செய்தவன் ஆவான்.
* முட்டாளோடு நட்பு கொள்ளக்கூடாது. அறிவாளியோடு உறவாடுவது கடினமானது என்றாலும், அதுவே நன்மை தரும்.
* கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையைத் திறம்பட வாழ்வதே நிறைவான வாழ்க்கை.
* பேராசையை ஒழித்து விட்டவன் பதட்டப்பட தேவையிருக்காது. எப்போதும் இனிமையுடன் வாழலாம்.
* கேட்டதையெல்லாம் புத்திசாலி நம்புவதில்லை. சிந்தித்து உண்மையை அறியவே அவன் முயற்சி செய்வான்.
* கல்வியறிவு இல்லாதவன் கூட, சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு தேவை முயற்சி தான்.
* சோம்பலை விட்டு உழைப்பவன், கஷ்ட காலத்திலும் ஒளி விளக்கு போல பலருக்கும் வழிகாட்டுவான்.
* பணத்தால் வரும் இன்பம் தற்காலிகமானது. மன திருப்தியால் உண்டாகும் இன்பமே வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum