Top posting users this month
No user |
20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை! உண்மைகளை கண்டுபிடிக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
Page 1 of 1
20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை! உண்மைகளை கண்டுபிடிக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
கடந்த வாரம் ஆந்திராவின் சேஷாசல வனப்பகுதியில், தமிழ்நாட்டை சேர்ந்த அப்பாவித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், “இந்தப் பிரச்சினையில், நம்பத்தகுந்த, விரைவான விசாரணை நடத்த வேண்டும்” என கேட்டிருந்தார்.
அதில் சம்பவத்தில் இறந்தவர்கள், அனைவரும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்ததற்கான வாய்ப்பு இருந்திருந்தாலும், இவ்வளவு பேர் இறந்திருப்பதைப் பார்க்கும் போது, அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன்தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புவதாக அமைந்துள்ளது.
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், குற்றவாளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு, சந்திரபாபு நாயுடு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், “உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், உண்மைகளை அறிந்து கொள்ள, ஆந்திர பிரதேச மாநில அரசு மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை, தாமதமின்றி நடத்தி முடிக்கப்படும். அதன் பேரில் மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், “இந்தப் பிரச்சினையில், நம்பத்தகுந்த, விரைவான விசாரணை நடத்த வேண்டும்” என கேட்டிருந்தார்.
அதில் சம்பவத்தில் இறந்தவர்கள், அனைவரும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்ததற்கான வாய்ப்பு இருந்திருந்தாலும், இவ்வளவு பேர் இறந்திருப்பதைப் பார்க்கும் போது, அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன்தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புவதாக அமைந்துள்ளது.
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், குற்றவாளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு, சந்திரபாபு நாயுடு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், “உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், உண்மைகளை அறிந்து கொள்ள, ஆந்திர பிரதேச மாநில அரசு மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை, தாமதமின்றி நடத்தி முடிக்கப்படும். அதன் பேரில் மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum