Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மதுபானசாலையை மூடுமாறு பொதுமக்கள் போராட்டம்: தூக்கிட்டு குடும்பஸ்தர் தற்கொலை

Go down

மதுபானசாலையை மூடுமாறு பொதுமக்கள் போராட்டம்: தூக்கிட்டு குடும்பஸ்தர் தற்கொலை Empty மதுபானசாலையை மூடுமாறு பொதுமக்கள் போராட்டம்: தூக்கிட்டு குடும்பஸ்தர் தற்கொலை

Post by oviya Mon Mar 23, 2015 12:54 pm

நுவரெலியா மாவட்டத்தின் டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 5ம் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடுமாறு கூறி டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 500ற்கும் மேற்பட்ட மாணவா்களும், பெற்றோர்களும் இன்று குறித்த மதுபானசாலைக்கு முன்பாக சுமார் 5 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
5 வருட காலங்களாக இவ் மதுபானசாலை இயங்குவதாகவும் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் உழைக்கும் வருமானம் மதுபானசாலைக்கே செல்வதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் இப்பிரதேச மக்கள் பின்தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனா்.

டயகம நகரத்தில் இருந்து 6 கிலோ மீற்றா் தொலைவில் இந்த மதுபானசாலை அமைந்திருப்பது குறிப்பிடதக்கது. அத்தோடு டயகம நகரத்தில் 2 மதுபானசாலைகள் காணப்படுகின்றன. தோட்ட தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கும் போது அன்றைய நாட்களில் ஆண்கள் அதிகமாக மது அருந்திவிட்டு வீடுகளில் குடும்ப பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்குமாறும், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவா்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த ஆர்பாட்டத்தின் மூலம் தாங்கள் தெரிவிப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் மேலும் தெரிவித்தனா்.



பாடசாலை மாணவா்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.அதன் பின்னா் டயகம பொலிஸார் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்று மதுபானசாலையை மூடுவதற்கு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கலைந்து சென்றனா்.





குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!

கொட்டகலை – டிரேட்டன் தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான மகாலிங்கம் மகேந்திரகுமார் என்பரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் இவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பத்தனை பொலிஸார் தெரிவித்தனா்.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum