Top posting users this month
No user |
Similar topics
குமாஸ்தா வேலைக்காக கால்கடுக்க வரிசையில் காத்திருந்த எம்.எல்.ஏ. மகன்
Page 1 of 1
குமாஸ்தா வேலைக்காக கால்கடுக்க வரிசையில் காத்திருந்த எம்.எல்.ஏ. மகன்
ராஜஸ்தானை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், குமாஸ்தா வேலைக்காக கால்கடுக்க வரிசையில் காத்திருந்த அதிசயம் நடந்தேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநில விவசாய விளைபொருள் விற்பனை வாரியத்தில் குமாஸ்தா பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நேற்று ஆக்ரா நகரில் நடைபெற்றுள்ளது.
இந்த தேர்வில் அம்மாநில எம்.எல்.ஏ.வான ஹீராலால் வர்மா என்பவரின் மகன் ஹன்ஸ்ராஜ் என்பவரும் மற்ற விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து வரிசையில் காத்திருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி எம்.எல்.ஏ. ஹீராலால் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, ஒரு கிளினிக்கில் வேலை செய்யும் என் மகன் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
எம்.எல்.ஏ.வின் மகன் பியூன் வேலைக்காக வரிசையில் காத்திருப்பது என்பது சற்று வித்தியாசமான செய்திதான்.
எனினும், நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு இதுவும் ஒரு நல்ல வழி. என் பிள்ளைகள் தவறான வழிகளில் ஈடுபட்டு வசதியான வாழ்க்கை வாழ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அரசு வேலை கிடைத்தால் என் மகனின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என அந்த வேலைக்காக விண்ணப்பிக்கும்படி கூறினேன்.
மேலும், இந்த பணிக்கான ஆள்சேர்ப்பு ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில விவசாய விளைபொருள் விற்பனை வாரியத்தில் குமாஸ்தா பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நேற்று ஆக்ரா நகரில் நடைபெற்றுள்ளது.
இந்த தேர்வில் அம்மாநில எம்.எல்.ஏ.வான ஹீராலால் வர்மா என்பவரின் மகன் ஹன்ஸ்ராஜ் என்பவரும் மற்ற விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து வரிசையில் காத்திருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி எம்.எல்.ஏ. ஹீராலால் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, ஒரு கிளினிக்கில் வேலை செய்யும் என் மகன் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
எம்.எல்.ஏ.வின் மகன் பியூன் வேலைக்காக வரிசையில் காத்திருப்பது என்பது சற்று வித்தியாசமான செய்திதான்.
எனினும், நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு இதுவும் ஒரு நல்ல வழி. என் பிள்ளைகள் தவறான வழிகளில் ஈடுபட்டு வசதியான வாழ்க்கை வாழ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அரசு வேலை கிடைத்தால் என் மகனின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என அந்த வேலைக்காக விண்ணப்பிக்கும்படி கூறினேன்.
மேலும், இந்த பணிக்கான ஆள்சேர்ப்பு ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum