Top posting users this month
No user |
Similar topics
9வது திருத்தம் ரணில் – மைத்திரி உடன்பாடு: முன்னிலை சோசலிசக் கட்சி
Page 1 of 1
9வது திருத்தம் ரணில் – மைத்திரி உடன்பாடு: முன்னிலை சோசலிசக் கட்சி
அரசாங்கம் முன்வைத்துள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மக்களின் நலன்களுக்காக கொண்டு வந்த திருத்தம் அல்ல எனவும் அது ஆட்சியாளர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்த கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டம் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த தற்போது அமுலில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 18 தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவே இது திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்களின் நலன்களுக்காக திருத்தங்கள் செய்யப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்ய நாடாளுமன்ற ஆலோசனை குழு நியமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அப்படியான சபை நியமிக்கப்படவில்லை.
அவ்வாறான சபை ஒன்று நியமிக்கப்படுமாயின் அதில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், வாக்குறுதியில் கூறிய சபையை ஏற்படுத்தாது ஒரு சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி அரசாங்கம் தற்போது திருத்தம் பற்றி பேசுகிறது.
இந்த திருத்தமும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி தனக்கு தேவையான அதிகாரங்களை வைத்து கொண்டு சிறிய மாற்றங்களை செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தை நான்கரை ஆண்டுகளாக குறைத்தது மாத்திரமே 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மையாகும் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த தற்போது அமுலில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 18 தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவே இது திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்களின் நலன்களுக்காக திருத்தங்கள் செய்யப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்ய நாடாளுமன்ற ஆலோசனை குழு நியமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அப்படியான சபை நியமிக்கப்படவில்லை.
அவ்வாறான சபை ஒன்று நியமிக்கப்படுமாயின் அதில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், வாக்குறுதியில் கூறிய சபையை ஏற்படுத்தாது ஒரு சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி அரசாங்கம் தற்போது திருத்தம் பற்றி பேசுகிறது.
இந்த திருத்தமும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி தனக்கு தேவையான அதிகாரங்களை வைத்து கொண்டு சிறிய மாற்றங்களை செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தை நான்கரை ஆண்டுகளாக குறைத்தது மாத்திரமே 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மையாகும் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் அடக்குமுறையை செயற்படுத்தும் மைத்திரி: முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» மக்களை தோற்கடித்து வரவு செலவுத் திட்டம் வெற்றி! முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றச்சாட்டு
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» மக்களை தோற்கடித்து வரவு செலவுத் திட்டம் வெற்றி! முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum