Top posting users this month
No user |
Similar topics
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
Page 1 of 1
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
தமிழக மீன்பிடிப் படகுகளை விடுவிக்க 150 பேர் கொண்ட தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று இலங்கை சென்றுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 86 படகுகள் காங்கேசன்துறை, காரைநகர், மற்றும் தி்ருகோணமலை பகுதியில் கடற்படையினரின் கட்டுபாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 34 படகுகளை கொண்டு செல்வதற்காக தமிழகத்தில் இருந்து மீன்வளத்துறையினர் மீனவர் குழுக்களுடன் இலங்கை சென்றனர்.
150 பேர் கொண்ட இந்த குழு இரண்டாக பிரிந்து காங்கேசன் துறைக்கும், திருகோணமலைக்கும் செல்லவுள்ளது.
படகுகள் மட்டுமின்றி மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள், மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளையும் இலங்கை அரசு இந்திய குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
மொத்தம் 86 படகுகளை இலங்கை கைப்பற்றி வைத்திருந்தது. முதல்கட்டமாக இயங்கும் நிலையில் உள்ள 34 படகுகளை இந்திய மீட்பு குழுவினர் இன்று தமிழகம் கொண்டு செல்லவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
» இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
» இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum