Top posting users this month
No user |
உதயஸ்ரீக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவும்: மட்டக்களப்பில் பெண்கள் பேரணி
Page 1 of 1
உதயஸ்ரீக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவும்: மட்டக்களப்பில் பெண்கள் பேரணி
சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதி சிறைவாசம் அனுபவிக்கும் பெண்ணுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரியும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் மட்டக்களப்பில் இன்று காலை பெண்களின் பாரிய பேரணியொன்று நடைபெற்றது.
மேன்மைப்படுத்தும் இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் சென்றோர் பல வாசகங்கள் அடங்கிய கோசங்களை எழுப்பினர்.
புதிய அரசே ஏழைப்பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட திட்டம் செய், அவலமுறும் எம் பெண் சமூகத்திற்கு விடிவு எப்போது, பெண்கள் சுய தொழிலை மேற்கொள்ள உதவிக் கரம் நீட்டுங்கள் என எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கிச் சென்றனர்.
பின்னர் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேன்மைப்படுத்தும் இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் சென்றோர் பல வாசகங்கள் அடங்கிய கோசங்களை எழுப்பினர்.
புதிய அரசே ஏழைப்பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட திட்டம் செய், அவலமுறும் எம் பெண் சமூகத்திற்கு விடிவு எப்போது, பெண்கள் சுய தொழிலை மேற்கொள்ள உதவிக் கரம் நீட்டுங்கள் என எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கிச் சென்றனர்.
பின்னர் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum