Top posting users this month
No user |
சிறைக்கைதி கொலையில் பொலிசார் உதவி, குற்றம்சாட்டிய பெண்ணுக்கு ரூ. 5 ஆயிரம் பணம்: பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1
சிறைக்கைதி கொலையில் பொலிசார் உதவி, குற்றம்சாட்டிய பெண்ணுக்கு ரூ. 5 ஆயிரம் பணம்: பரபரப்பு தகவல்கள்
நாகாலாந்தில் பாலியல் வழக்கில் கைதான சிறைக்கைதியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவத்தில் பொலிசாரே உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் சையது பரீத்கான் என்ற இளைஞர் இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச்சென்று கற்பழித்ததாக கைது செய்யப்பட்டு திமாப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, சிறை முன் திரண்ட சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் அந்த குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் திடீரென்று திமாப்பூர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து குற்றவாளி பரீத்கானை வெளியில் இழுத்து வந்து நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.
சாலையில் நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதலில் பரீத் கான் பரிதாபமாக உயிரிழந்த பின்னர் அவரது உடலை தரதரவென இழுத்துச் சென்று அருகிலுள்ள சந்திப்பு ஒன்றில் தொங்க விட்டனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து தீமாப்பூர் மத்திய சிறைத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உயர் அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ள சிறையில் பரீத் கானை மட்டும் எப்படி பொதுமக்கள் அடையாளம் கண்டனர்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையடுத்து தற்போது இச்சம்பவத்தில் பொலிசார் உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி, சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று எனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தார், அதனை நான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் சையது பரீத்கான் என்ற இளைஞர் இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச்சென்று கற்பழித்ததாக கைது செய்யப்பட்டு திமாப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, சிறை முன் திரண்ட சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் அந்த குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் திடீரென்று திமாப்பூர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து குற்றவாளி பரீத்கானை வெளியில் இழுத்து வந்து நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.
சாலையில் நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதலில் பரீத் கான் பரிதாபமாக உயிரிழந்த பின்னர் அவரது உடலை தரதரவென இழுத்துச் சென்று அருகிலுள்ள சந்திப்பு ஒன்றில் தொங்க விட்டனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து தீமாப்பூர் மத்திய சிறைத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உயர் அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ள சிறையில் பரீத் கானை மட்டும் எப்படி பொதுமக்கள் அடையாளம் கண்டனர்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையடுத்து தற்போது இச்சம்பவத்தில் பொலிசார் உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி, சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று எனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தார், அதனை நான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum