Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சங்க காலத் தொழில்நுட்பம்

Go down

சங்க காலத் தொழில்நுட்பம்          Empty சங்க காலத் தொழில்நுட்பம்

Post by oviya Fri Mar 06, 2015 2:33 pm

விலைரூ.190
ஆசிரியர் : பேராசிரியர் த. சாமிநாதன்
வெளியீடு: அன்னம் (பி) லிடெட்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில்நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார்.
பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடற்பயணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார்.
நிறைவு தலைப்பாக, சங்க இலக்கியத்தில் தொழில்நுட்ப நூல்கள் என்ற தலைப்பில், அந்தந்த துறை சார்ந்த நூல்கள், சங்க காலத்தில் மக்களிடையே பயின்று வந்தன என, நிறுவ ஆசிரியர் முயல்கிறார்.
‘கருடன் சம்பா’ என்ற சிறந்த நெல்லின் பெயர், பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்பட்டிருப்பது, தாளடியில் (நெல் பயிரிட்டு அறுவடை ஆனபோது நிலத்தில் ஈரப்பதம் இருக்கும். அதிலேயே உளுந்து, பயறு பயிரிடுவது குறித்து, ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்பட்டிருப்பது, மெல்லிய வேலைப்பாடு கொண்ட ஆடைகள் நெய்யப்பட்டது குறித்து புறநானூறு, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பது, குளிர்ச்சி பொருந்தியவையாக இருக்கும்படி இல்லங்கள் கட்டப்பட்டது குறித்து, புறநானூற்றில் சொல்லப்பட்டிப்பது என, பல சுவாரசிய தகவல்கள், புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளன.
அதேபோல், கடற்பயணம், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட தகவல்களும், சங்க இலக்கியத்தில் உள்ளன என்பதை ஆசிரியர் தரவுகளோடு எடுத்து காண்பித்துள்ளார். தமிழ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, அனைவருக்கும் பயன்படும் இந்த நூல்.
சொக்கர்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum