Top posting users this month
No user |
Similar topics
கடந்த கால பிரச்சினைகளை இலங்கை தீர்க்க வேண்டும்: ஐ.நாவின் அரசியல் விவகார செயலாளர்
Page 1 of 1
கடந்த கால பிரச்சினைகளை இலங்கை தீர்க்க வேண்டும்: ஐ.நாவின் அரசியல் விவகார செயலாளர்
தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நம்பிக்கை பழுதடைந்ததன் காரணமாக ஏற்பட்ட பாரிய இடைவெளி இன்னும் அப்படியே இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான செயலாளர் ஜெப்ரி பெஃல்டிமன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனால், பொது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்த கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 4 தினங்களில் இலங்கையில் சாதகமான, பலன் தரும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.
ஜனநாயக தேர்தல், அமைதியின் முன்னேற்றம் என்பன சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியது.
இலங்கையில் இருந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.
மோதல் நடந்த காலத்தில் இலங்கையர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கினர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்கிறது.
இலங்கையில், பல ஆணைக்குழுக்கள் செயற்பட்ட போதிலும் துன்பங்கள், தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
காணி, தடுத்து வைத்தல், சிவில் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் போன்ற பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீரக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஐக்கிய நாடுகளின் 70வது ஆண்டு நிறைவின் போது இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்று 60 வருடம் பூர்த்தியாகிறது. அதனை கொண்டாடும் போது புதிதான தொடர்புகளுக்கான எதிர்பார்ப்புக்கு ஆசிகளை வழங்குவதாகவும் ஜெப்ரி பெஃல்டிமன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனால், பொது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்த கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 4 தினங்களில் இலங்கையில் சாதகமான, பலன் தரும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.
ஜனநாயக தேர்தல், அமைதியின் முன்னேற்றம் என்பன சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியது.
இலங்கையில் இருந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.
மோதல் நடந்த காலத்தில் இலங்கையர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கினர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்கிறது.
இலங்கையில், பல ஆணைக்குழுக்கள் செயற்பட்ட போதிலும் துன்பங்கள், தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
காணி, தடுத்து வைத்தல், சிவில் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் போன்ற பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீரக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஐக்கிய நாடுகளின் 70வது ஆண்டு நிறைவின் போது இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்று 60 வருடம் பூர்த்தியாகிறது. அதனை கொண்டாடும் போது புதிதான தொடர்புகளுக்கான எதிர்பார்ப்புக்கு ஆசிகளை வழங்குவதாகவும் ஜெப்ரி பெஃல்டிமன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» இலங்கை அரசு கடந்த அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டும்: சீனா
» அறிக்கை பிற்போடும் ஐ.நாவின் முடிவு: அமெரிக்கா, இலங்கை வரவேற்பு
» ஐ.நாவின் இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்: பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம் !
» அறிக்கை பிற்போடும் ஐ.நாவின் முடிவு: அமெரிக்கா, இலங்கை வரவேற்பு
» ஐ.நாவின் இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்: பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum