Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டங்களை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம்! வர்த்தகர் சங்கம் தூக்கம்

Go down

கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டங்களை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம்! வர்த்தகர் சங்கம் தூக்கம் Empty கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டங்களை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம்! வர்த்தகர் சங்கம் தூக்கம்

Post by oviya Fri Feb 27, 2015 1:32 pm

கிளிநொச்சி சந்தை மற்றும் நகரப் பகுதிகளில் மாவட்டத்தை சேராத வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரம் செய்பவர்களால் பல்வேறு நெருக்கடிகள் சீர்கேடுகள் பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சகோதர இனங்களை சேர்ந்த வியாபாரிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் நிரந்தரமாக காலம்காலமாக வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் கடும்பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

கிளிநொச்சி நகரம் மற்றும் சந்தை உட்பட்ட பகுதிகளின் கட்டுப்பாடு கரைச்சி பிரதேச சபைக்கு அதிகார எல்லைக்கு உட்பட்டே காணப்படுகின்றது.

இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப்போக்கு, கிளிநொச்சி வர்த்தகர் சங்க நிர்வாகங்களின் அசமந்தபோக்கு காரணமாக, கிளிநொச்சியில் நீதியற்ற ஒரு வியாபார நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.

சந்தைப் பகுதியில் பலகடைகள் உரிமையாளர்களால் வேறு நபர்களுக்கு குத்தகைக்கோ, வாடகைக்கோ வழங்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு மூன்று நான்கு கடைகள் இருப்பதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளன.இதேபோல சந்தைக்கு வெளியே உள்ள கடைகளும் இங்குள்ள காணி உரிமையாளர்களால் மற்றும் கடை உரிமையாளர்களால் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகளுக்கோ அல்லது முஸ்லிம் வியாபாரிகளுக்கோ வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய கடையை நடத்துகின்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறந்து நடத்துவதுடன் இரவு பத்து பதினொரு மணிவரை கடைகளை திறந்து வைத்துள்ளனர்.

இந்தக்கடைகளில் கிளிநொச்சியை சேர்ந்த கஸ்டப்பட்ட இளம் பெண் பிள்ளைகளே பணி செய்கின்றனர். ஏனைய கடைகள் திறக்கப்படாமல் வேறு மாவட்டத்தில் இருந்துவரும் வியாபாரிகள் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறக்கின்றபோது கலாச்சார சீரழிகளும் ஆங்காங்கு நடைபெறுகின்றன.

எனவே கரைச்சி பிரதேச சபை மற்றும் வரத்தகம் சங்கம் என்பன அசமந்தப்போக்குகளை தவிர்த்து கிளிநொச்சி வியாபாரிகளின் வருமானங்களை பாதுகாத்து கலாச்சார சீரழிவுகளையும் தவிர்த்த வியாபார சட்ட நடைமுறைகளை பேண வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணின் பொருளாதார வறுமையை பயன்படுத்தி வேறு மாவட்டத்தில் இருந்துவரும் பணமுதலைகளும் கலாச்சார பிறழ்வு உள்ளவர்களும் கிளிநொச்சி மண்ணை சீரழிப்பதற்கும் சுரண்டுவதற்கும் சம்மந்தப்பட்ட அதிகார தரப்புக்கள் இடமளிக்க கூடாது என பாதிக்கப்படும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம
» தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு பொலிஸாருக்கு ஆதரவு வழங்கவும்: பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்
» முஸ்லிம் காங்கிரஸ் செய்வது அரசியல் வியாபாரம்!- ஜனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum