Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலை குறைகூறிய சம்பிக்க, அனுர மற்றும் சரத் பொன்சேகா

Go down

ரணிலை குறைகூறிய சம்பிக்க, அனுர மற்றும் சரத் பொன்சேகா Empty ரணிலை குறைகூறிய சம்பிக்க, அனுர மற்றும் சரத் பொன்சேகா

Post by oviya Thu Feb 26, 2015 1:10 pm

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனநாயக்க கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குறை கூறியுள்ளனர்.
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் நடத்திய வந்த எவண் காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் நிஸ்சங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் குறை கூறியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணை பணியகத்தின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, நிஸ்சங்க சேனாதிபதியின் சட்ட ஆலோசகராக பணியாற்றுவது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எவண் காட் நிறுவனத்தின் உரிமையாளரது கடவுச்சீட்டை நீதிமன்றம் முடக்கிய பின்னர், அதனை பெற்றுக்கொடுக்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமரின் ஆலோசகர் திலக் மாரப்பன ஆகியோர் தலையிட்டுள்ளதாக நிறைவேற்றுச் சபையில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்காவிட்டால், எவராவது தண்டனை வழங்கப்படுவதை தடுத்தால் அல்லது தடையேற்படுத்தினால், அது குறித்து நாங்கள் கட்டாயம் மக்கள் மத்தியில் சென்று அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்துவோம் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, எவண் காட் பாதுகாப்பு நிறுவனம் தனக்கு சொந்தமான மஹநுவர என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்திச் செல்ல தேவையான சகல அனுமதிப் பத்திரங்களையும் பெற்றிருந்தாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum