Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம்

Go down

சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம் Empty சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம்

Post by oviya Tue Feb 24, 2015 12:53 pm

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இது குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுடள்ளார்.

இதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் பிரதிநிதியான அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 27 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம் நடைபெறவிருந்த நிலையில், 27ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பில் சவூதி மன்னருடன் அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் 27 ஆம் திகதி கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பதில் வெளியிடப்படும் வரையில், இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாதென அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் கூறினார்.

2007 ஆம் ஆண்டு யேமன் பிரஜையை கொலை செய்தமை தொடர்பில் மூவருக்கும் சவூதி நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அந்தத் தண்டணை சவூதி உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான் விரும்பவில்லை: தலதா அதுகோரல

இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான் விரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இதனை விடவும் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வெளிநாடு செல்வதனால் அவர்களது பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்து பெண் என்ற ரீதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒர் பெண்ணாகவே இந்தப் பிரச்சினை பார்க்கின்றேன் எனவும் தாய் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் தம்மை பற்றி என்ன சொன்னாலும் மனச்சாட்சியின் அடிப்படையில் தாம் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சவூதி மன்னருடன் தொடர்புகளைப் பேணி வரும் ரவூப் ஹக்கீமை குறித்த நபர்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் தாம் அங்கு சென்று இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவதனை விடவும் அமைச்சர் ஹக்கீம் செல்வது பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum