Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மீனவர்களின் 74 படகுகளும் விடுவிப்பு! மன்னார் நீதிமன்றம் உத்தரவு

Go down

தமிழக மீனவர்களின் 74 படகுகளும் விடுவிப்பு! மன்னார் நீதிமன்றம் உத்தரவு Empty தமிழக மீனவர்களின் 74 படகுகளும் விடுவிப்பு! மன்னார் நீதிமன்றம் உத்தரவு

Post by oviya Thu Feb 12, 2015 1:11 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 74 படகுகளையும் விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் இப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை மீனவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இடைவிடாமல் சிறை பிடிக்கப்பட்டு, அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

இராமநாதபுரம்-45, புதுக்கோட்டை-27 (2 நாட்டுப்படகுகள் உட்பட), நாகை-8, பூம்புகார்-1, காரைக்கால்-4 என மொத்தம் 87 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனால், பல கோடி மதிப்புள்ள இந்த படகுகளை இழந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல்,போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum