Top posting users this month
No user |
Similar topics
மட்டு. கரடியனாறில் வான் சில்லுக்குள் அகப்பட்டு பெண்ணொருவர் பலி
Page 1 of 1
மட்டு. கரடியனாறில் வான் சில்லுக்குள் அகப்பட்டு பெண்ணொருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவானில் இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மகலேகம் தெரிவித்தார்.
செங்கலடி வேப்பவெட்டுவானைச் சேர்ந்த எஸ்.நாகேஸ்வரி (வயது 44) என்ற குடும்பப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
தற்சமயம் இவரது சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதென்று பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
வேப்பவெட்டுவானில் இந்தப் பெண் தனது கடை அருகே நின்ற போது பின் பக்கமாக வானை வேகமாகத் திருப்புகையில் வான் சில்லுக்குள் அகப்பட்டு பெண் மரணமாகியுள்ளார்.
வான் கைப்பற்றப்பட்டதோடு வான் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மகலேகம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த வானின் சாரதி முன்னாள் அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்று விசாரணையின் போது தெரிய வந்திருக்கின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லொறியின் சில்லுக்குள் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து!- இருவர் கவலைக்கிடம்
» பிறந்த நாளன்று பெண்ணொருவர் வெட்டிக் கொலை
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
» பிறந்த நாளன்று பெண்ணொருவர் வெட்டிக் கொலை
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum