Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த சில மணிநேரத்தில் கைவிட்டுச் சென்ற கணவர்

Go down

கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த சில மணிநேரத்தில் கைவிட்டுச் சென்ற கணவர் Empty கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த சில மணிநேரத்தில் கைவிட்டுச் சென்ற கணவர்

Post by oviya Sun Feb 08, 2015 11:22 am

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணியாக்கிய காதலியை கரம்பிடித்து சில மணி நேரத்திற்குள் கைவிட்டுச் சென்ற கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மாரிமுத்து ( 21). இவர் மினி பஸ் நடத்துனராக வேலைபார்த்து வருகிறார்.

இவர் தினமும் வள்ளுவர் நத்தம் என்ற இடத்தில் இரவு பேருந்தை நிறுத்தி காலையில் எடுத்து செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகள் கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது மாரிமுத்து திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கவிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் அவர் 4 மாத கர்ப்பிணி ஆனார். இதுபற்றி தெரியவந்ததும் கவிதாவின் பெற்றோரும் , ஊர்மக்களும் காதல்ஜோடியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 3–ந் திகதி அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து மாரிமுத்து கவிதாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தகவலை காதல்ஜோடிகள் தெரிவித்தனர்.

பின்னர் காதல் ஜோடியும், உறவினர்களும் ஒரு பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அந்த பேருந்து கரம்பயம் என்ற இடத்தில் நின்றபோது மாரிமுத்து கீழே இறங்கி தலைமறைவாகி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா மீண்டும் பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று கணவர் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.

அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடிவருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum