Top posting users this month
No user |
சீக்கிய குருவாய் நடித்ததில் பெருமை: சர்ச்சையை கிளப்பிய சாமியார்
Page 1 of 1
சீக்கிய குருவாய் நடித்ததில் பெருமை: சர்ச்சையை கிளப்பிய சாமியார்
சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கை போல் படம் ஒன்றில் சாமியார் ஒருவர் நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'தேரா சச்சா தேவா' என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். சாமியரான இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
மேலும் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது.
ஆனால் அதற்கு பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13ம் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் பேசியதாவது, இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன் என்றும் இப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் பேசியுள்ளார்.
'தேரா சச்சா தேவா' என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். சாமியரான இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
மேலும் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது.
ஆனால் அதற்கு பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13ம் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் பேசியதாவது, இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன் என்றும் இப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum