Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்வரும் நாட்களில் கட்சி தாவல்கள் இடம்பெறும்: ராஜித மற்றும் கெஹலிய

Go down

எதிர்வரும் நாட்களில் கட்சி தாவல்கள் இடம்பெறும்: ராஜித மற்றும் கெஹலிய Empty எதிர்வரும் நாட்களில் கட்சி தாவல்கள் இடம்பெறும்: ராஜித மற்றும் கெஹலிய

Post by oviya Sat Jan 03, 2015 12:58 pm

எதிர்வரும் 5 நாட்களில் ஐந்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்டக்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் இந்த அமைச்சர்கள் மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் உரையாற்றுவார்கள்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் தோன்றுவார்கள்.

இதுவரையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர் என ராஜித சேனாரட்ன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் கட்சி தாவல்கள் இடம்பெறும் - கெஹலிய

எதிர்வரும் நாட்களிலும் கட்சித் தகாவல்கள் இடம்பெறும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்க்கட்சிக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் ஆளும் கட்சிக்கும் எதிர்வரும் மூன்று நான்கு நட்களில் இணைந்து கொள்ளக் கூடும்.

இந்த நாட்களில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்கின்றார்கள்.

அதேபோன்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இவ்வாறான கட்சத் தாவல்களை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியும்.

நான், பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான கதைகள் எதிர்வரும் நாட்களிலும் பிரச்சாரம் செய்யப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்று கட்சித் தாவல் தொடர்பில் அமைச்சரிடம் கோரிய போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum