Top posting users this month
No user |
எதிர்வரும் 13 நாட்களில் மோசடிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்படுவர்! கொழும்பு ஊடகம்
Page 1 of 1
எதிர்வரும் 13 நாட்களில் மோசடிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்படுவர்! கொழும்பு ஊடகம்
மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைய இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், அடுத்த வாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஏற்கனவே லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் வகையில் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உட்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் முன்னைய அரசாங்க காலத்தில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தை கலைக்கும் போது வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றி விட்டது என்பதை பொதுமக்களுக்கு கூற முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அரசாங்கம் செய்யாவிட்டால் மக்களின் நம்பிக்கையை பெற, அரசாங்கம் பாரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஏற்கனவே லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் வகையில் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உட்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் முன்னைய அரசாங்க காலத்தில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தை கலைக்கும் போது வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றி விட்டது என்பதை பொதுமக்களுக்கு கூற முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அரசாங்கம் செய்யாவிட்டால் மக்களின் நம்பிக்கையை பெற, அரசாங்கம் பாரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum