Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி

Go down

விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி Empty விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி

Post by oviya Tue Jul 07, 2015 2:43 pm

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்ட பவித்ரா என்ற பெண்ணிடம் சென்னை நீதிபதி, விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா(23) என்ற பெண்ணுக்கும், ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது(26) என்ற நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 ஆம் திகதி பவித்ரா திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பவித்ரா மாயமானது குறித்து விசாரணை நடத்துவதற்காக கடந்த யூன் 15 ஆம் திகதி ஷமிலை பொலிசார் அழைத்துச்சென்றுள்ளனர், அப்போது பொலிசார் அவரை தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 26 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆம்பூரில் கடந்த 27 ஆம் திகதி கலவரம் வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட பொலிசார் தாக்கப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 126 பேரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாயமான பவித்ராவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து தனிப்படையினர் பவித்ராவை தேடிவந்தனர்.

மாயமான பவித்ரா கைப்பேசி மூலம் கோயம்பேட்டில் உள்ள தனது தோழியுடன் தொடர்பு கொண்டது தெரியவந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் பவித்ராவின் கணவர் பழனி தனது குழந்தையுடன் ஆஜரானார், தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று நீதிபதிகளிடம் பவித்ரா கோரிக்கை வைத்தார்.

மேலும், எனக்கும் எனது கணவருக்குமிடையே 14 வயது வித்தியாசம் உள்ளதால் அவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லாததால் தான் அவரை விட்டு பிரிந்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனைக்கேட்ட நீதிபதிகள், "விவாகரத்து என்ன கடையில் கிடைக்கும் பொருளா?" என கேள்வி எழுப்பியதோடு, முறையாக கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு பவித்ராவுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், ஆம்பூரில் நடந்த வன்முறை வருத்தம் அளிக்கின்றன என்றும், கணவருடன் பவித்ரா முறையாக குடும்பம் நடத்தியிருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum